மேற்கு சத்ரபதிகள்
From Wikipedia, the free encyclopedia
மேற்கு சத்ரபதிகள் (Western Satraps) (ஆட்சிக் காலம் கிபி 35 – 405), தற்கால மேற்கு மற்றும் மைய இந்தியாவின் பகுதிகளான சௌராஷ்டிர தீபகற்பம், மாளவம், மகாராட்டிரம், குசராத்து, இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் பாகிஸ்தானின் சிந்து பகுதிகளை கி மு 35 முதல் கி. பி 405 வரை ஆண்ட, நடு ஆசியாவின் சிதியர்கள் இனத்தைச் சேர்ந்த இந்தோ-சிதியன் குல வழி வந்த மேற்கு சத்ரபதிகள் ஆவார். இவர்கள் இந்தியத் துணைக்கண்டத்தின் மேற்குப் பகுதிகளை ஆண்டதால் மேற்கு சத்திரபதிகள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றனர்.[1] [2] வட இந்தியாவை ஆட்சி செய்த இதே இனத்தவர்களை வடக்கு சத்திரபதிகள் என்பவர்.
மேற்கு சத்ரபதிகள் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கிபி 35–கிபி 405 | |||||||||
தலைநகரம் | உஜ்ஜைன் | ||||||||
பேசப்படும் மொழிகள் | பாலி சமசுகிருதம் பிராகிருதம் | ||||||||
சமயம் | இந்து சமயம் பௌத்தம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
இந்தோ-சிதியன்#இந்தோ-சிதியன் ஆட்சியாளர்கள்#மேற்கு சத்ரபதிகள் | |||||||||
• கிபி 35 | அபிரகா | ||||||||
• 388–395 | மூன்றாம் ருத்திரசிம்மன் | ||||||||
வரலாற்று சகாப்தம் | பண்டைய இந்தியா | ||||||||
• தொடக்கம் | கிபி 35 | ||||||||
• முடிவு | கிபி 405 | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | இந்தியா பாக்கித்தான் |
மேற்கு சத்ரபதிகள் குசாணர்கள் மற்றும் சாதவாகனர்களின் சமகாலத்தவர்கள் ஆவர். சாதவாகனப் பேரரசின் காலத்தில், மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் மேற்கு சத்ரபதிகள் குறுநில மன்னர்களாக இருந்தனர். மேற்கு சத்ரபதி அரசர்கள் வெளியிட்ட நாணயங்கள் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளன. [3]
350 ஆண்டுகளில் மேற்கு சத்ரபதிகளில் 27 தன்னாட்சி பெற்ற மேற்கு சத்ரபதி குறுநில மன்னர்கள் மேற்கு இந்தியாவையும், மைய இந்தியாவையும் ஆண்டனர். பாரசீக மொழியில் சத்ரப் எனில் மாகாண ஆளுநர் என்று பொருள்படும்.
குஜராத் மாநிலத்தின் தேவ்னி மோரி தொல்லியல் களத்தை அகழாய்வு செய்த போது, மேற்கு சத்ரபதி மன்னர்கள் நிறுவிய பௌத்த விகாரைகள், தூபிகள், கற்பேழைகள் மற்றும் நாணயங்கள் கிடைத்தது. பௌத்த சமயத்தை ஆதரித்த மேற்கு சத்திரபதி மன்னர்களில் புகழ்பெற்றவர்கள் நகபானர், முதலாம் ருத்திரதாமன் மற்றும் மூன்றாம் ருத்திரசிம்மன் ஆவார்.
சாதவாகனர்களால் கிபி இரண்டாம் நூற்றாண்டில் வீழ்ச்சி கண்ட மேற்கு சத்திரபதிகளின் இராச்சியம், கிபி நான்காம் நூற்றாண்டில் குபதர்களால் முற்றிலும் ஒடுக்கப்பட்டனர்.[4]