தேவ்னி மோரி
From Wikipedia, the free encyclopedia
தேவ்னிமோரி (Devnimori, or Devni Mori), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் வடக்கில் அமைந்த ஆரவல்லி மாவட்டத்தில் உள்ள சாம்லாஜி நகரத்திற்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் தேவ்னி மோரி எனுமிடத்தில் உள்ள பௌத்த தொல்லியல் களம் ஆகும்.[1][2] இவ்விடத்தில் கிபி 3 / 4-ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி செய்த மேற்கு சத்திரபதி அரசர்கள் சாக்கிய முனிவரான கௌதம புத்தர் நினைவாக பிக்குகள் தங்குவதற்கும், வழிபாடுவதற்கும் விகாரைகளும், தூபிகளும் நிறுவினார்கள்.[3] [4]
தேவ்னிமோரி | |
---|---|
கௌதம புத்தரின் சுடுமட்சிலை | |
இருப்பிடம் | தேவ்னி மோரி, ஆரவல்லி மாவட்டம், குசராத், இந்தியா |
ஆயத்தொலைகள் | 23.54°N 73.13°E / 23.54; 73.13 |
வகை | விகாரை மற்றும் தூபி |
வரலாறு | |
கட்டப்பட்டது | கிபி 4-ஆம் நூற்றான்டு |
கலாச்சாரம் | கிரேக்க காந்தாரக் கலை |
ஒன்பது கௌதம புத்தரின் சிலைகள் தேவ்னி மோரியின் தூபியில் கண்டெடுக்கப்பட்டது.[5]கிரேக்க காந்தாரக் கலைநயத்தில் இந்த கௌதம புத்தரின் சிலைகள் வடிகக்ப்பட்டிருந்தது.[6] இவைகள் மேற்கு சத்திரபதி மன்னர்களின் கலைநயத்திற்கு எடுத்துகாட்டாகும்.[6][2][7]தேவ்னி மோரி விகாரை சுட்ட செங்கற்களால் நிறுவப்பட்டுள்ளது. [1]
தேவ்னிமோரி குஜராத்திற்கும், இராஜஸ்தான் பகுதிகளுக்கும் இடையே ஒரு வணிக மையமாக விளங்கியது. [8]
தேவ்னிமோரி தொல்லியல் களத்தில் மேற்கு சத்ரபதிகள் (கிபி 4-ஆம் நூற்றான்டு வரை), கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு (கிபி 5-ஆம் நூற்றாண்டு) காலம் முதல் முகலாயப் பேரரசு (14-ஆம் நூற்றான்டு) காலம் வரையிலான இந்து மற்றும் பௌத்த சமய தொல்பொருட்கள் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. [1]இத்தொல்லியல் களம் 1960 மற்றும் 1963-ஆம் ஆண்டுகளுக்கிடையே அகழ்வாய்வு செய்யப்பட்டது..[1]பின்னர் இத்தொல்லியல் களம் மெஷவா ஆற்றின் நீர்த் தேக்க வெள்ள்த்தால் சிதைந்து போனது.[1][9]
தேவ்னிமோரி தொல்லியல் களத்தில் கிபி 3 அல்லது 4-ஆம் நூற்றான்டின் கௌதம புத்தரின் சுடுமட்சிலையின் தலைச்சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[1] [2][10]
இத்தொல்லியல் களத்தின் தூபிகளிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மூன்று அலங்காரப் பேழைகளின் ஒன்றில் குறித்த கல்வெட்டில், மேற்கு சத்திரபதி மன்னர் முதலாம் ருத்திரதாமன் ஆட்சிக் காலம் குறிக்கப்பட்டுள்ளது. தூபிகளிலிருந்து நினைவுச் சின்னங்கள் அடங்கிய மூன்று கற்பேழைகள் கண்டெடுக்கப்பட்டது.[11][1]
"In the year 127 of the Kathika kings, when king Rudrasena was ruling, the erection of this stupa, which was banner of this earth, was done. It was the 5th day of Bhadrapada."
இத்தொல்லியல் களத்தின் ஒரு கல் பேழையில் கிபி 204-ஆம் ஆண்டு காலத்திய மேற்கு சத்ரபதி மன்னர் முதலாம் ருத்திரதாமன் மற்றும் கிபி 375-ஆம் ஆண்டு காலத்திய மூன்றாம் ருத்திரசிம்மன் ஆகியவர்களின் நாணயங்கள் கிடைத்துள்ளது.[14]
மற்றொரு கல் பேழையில் மேற்கு சத்திரபதி மன்னர் விஸ்வசேனர் (294-305)[1]மற்றும் முதலாம் ருத்திரசிம்மன் (305-313) வெளியிட்ட நாணயங்கள் கிடைத்துள்ளது.[11]