மூன்றாம் ருத்திரசிம்மன்
From Wikipedia, the free encyclopedia
மூன்றாம் ருத்திரசிம்மன் (Rudrasimha III), மேற்கு இந்தியாவை ஆண்ட இந்தோ-சிதிய குலத்தின் மேற்கு சத்ரபதிகளின் இறுதி மன்னர் ஆவார். மூன்றாம் ருத்திரசிம்மன், கி பி 380ல் குப்தப் பேரரசர் இராமகுப்தரை வென்றவர். பின்னர் இரண்டாம் சந்திரகுப்தர் மூன்றாம் ருத்திரசிம்மனை வென்று, மேற்கு சத்ரபதி நாட்டை குப்தப் பேரரசுடன் இணைத்தார்.