உஜ்ஜைன்
From Wikipedia, the free encyclopedia
உச்சைன் (Ujjain) மத்திய இந்தியாவின் மால்வாப் பகுதியில் அமைந்துள்ள பழைய நகரமாகும். இதனை உஞ்சேனை என்று திருநாவுக்கரசர் தேவாரத்திலும் உஞ்சை எனத் தமிழ்ப்படுத்திப் பெருங்கதை என்னும் நூல் வழங்குகிறது.[3] இன்றைய மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இது சிப்ரா ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. இது உச்சைன் மாவட்டத்தினதும், உச்சைன் பிரிவினதும் நிர்வாக மையமாகும்.
உச்சைன் | |
— நகரம் — | |
அமைவிடம் | 23°10′58″N 75°46′38″E |
நாடு | இந்தியா |
மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
மாவட்டம் | உச்சைன் |
ஆளுநர் | ஓம் பிரகாஷ் கோலி, மங்குபாய் சாகன்பாய் படேல்[1] |
முதலமைச்சர் | மோகன் யாதவ்[2] |
மக்கள் தொகை | 429,933 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 491 மீட்டர்கள் (1,611 அடி) |
முற்காலத்தில் இது உச்சயினி என்று அழைக்கப்பட்டது. மகாபாரதத்தின்படி உச்சயினி அவந்தி அரசின் தலைநகரமாகும். உச்சைன் இந்துக்களின் ஏழு புனிதத் தலங்களில் ஒன்றாகும். இங்கே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா என்னும் விழா நடைபெறுகின்றது. சிவனுடைய 12 சோதிர்லிங்கங்களில் ஒன்றான உச்சைன் மகாகாலேசுவரர் கோயில் இங்கேயே உள்ளது.
உச்சைன் நகரம் முக்தி தரும் ஏழு இந்து புனித நகரங்களில் ஒன்றாக உள்ளது.