திரிபுவன் வீர விக்ரம் ஷா
From Wikipedia, the free encyclopedia
திரிபுவன் வீர விக்ரம் ஷா (Tribhuwan Bir Bikram Shah) (त्रिभुवन वीर विक्रम शाह), (30 சூன் 1906 – 13 மார்ச் 1955), நேபாள இராச்சியத்தை 11 டிசம்பர் 1911 முதல் 13 மார்ச் 1955 முடிய ஆட்சி செய்த மன்னராவர். இவரது தந்தை பிரிதிவி வீர விக்ரம் ஷாவின் மறைவின் போது, எட்டு வயதான திரிபுவன் ஷா 20 பிப்ரவரி 1913ல் நேபாள இராச்சியத்தின் அரியணைக்கு முடி சூட்டப்பட்டார். திரிபுவன் பருவ வயது அடையும் வரை, ராணி திவ்யேஷ்வரி, திரிபுவனின் அரசப் பிரதியாக நாட்டை நிர்வகித்தார்.
விரைவான உண்மைகள் திரிபுவன வீர விக்ரம் ஷா, நேபாள மன்னர் ...
திரிபுவன வீர விக்ரம் ஷா | |||||
---|---|---|---|---|---|
நேபாள மன்னர் | |||||
நேபாள மன்னர் | |||||
முடிசூட்டுதல் | 20 பிப்ரவரி1913 | ||||
ஆட்சிக்காலம் | 11 டிசம்பர் 1911 – 7 நவம்பர் 1950 | ||||
முன்னையவர் | பிரிதிவி வீர விக்ரம் ஷா | ||||
பின்னையவர் | ஞானேந்திரா | ||||
ஆட்சிக்காலம் | 18 பிப்ரவரி 1951 – 13 மார்ச் 1955 | ||||
முன்னையவர் | ஞானேந்திரா | ||||
பின்னையவர் | மகேந்திரா | ||||
பிறப்பு | (1906-06-30)30 சூன் 1906 காட்மாண்டு, நேபாள இராச்சியம் | ||||
இறப்பு | 13 மார்ச்சு 1955(1955-03-13) (அகவை 48) கண்டோன் மருத்துவ மனை, சூரிக்கு, சுவிட்சர்லாந்து | ||||
துணைவர் | ராணி காந்தி ராஜ்ஜிய லெட்சுமி தேவி ஐஸ்வரிய ராஜ்ஜிய லெட்சுமி தேவி | ||||
குழந்தைகளின் #Family | மகேந்திரா இளவரசி இமாலயா இளவரசி வசுந்திரா இளவரசன் திரிலோக்கியன் இளவரசி நளினி இளவரசி விஜயா இளவரசி பாரதி | ||||
| |||||
Dynasty | ஷா வம்சம் | ||||
தந்தை | பிரிதிவி வீர விக்ரம் ஷா | ||||
தாய் | ராணி திவ்யேஷ்வரி | ||||
மதம் | இந்து சமயம் |
மூடு
1857 முதல் ஷா வம்சத்தின் நேபாள மன்னர்கள், பெயரளவிற்கு மன்னர்களே இருந்தனரே தவிர, நாட்டின் நிர்வாகத்தை மன்னர்களின் பெயரில் ராண வம்சத்தின் பரம்பரை பிரதம அமைச்சர்களே நாட்டை ஆண்டனர். [1][2]