பிரிதிவி வீர விக்ரம் ஷா
From Wikipedia, the free encyclopedia
பிரிதிவி வீர விக்ரம் ஷா (Prithvi Bir Bikram Shah) (நேபாளி: पृथ्वी बीर विक्रम शाह) (18 ஆகஸ்டு 1875 – 11 டிசம்பர் 1911), நேபாள இராச்சியத்தை 1881 முதல் 1911 முடிய ஆட்சி செய்தவர். இவரது ஆட்சிக் காலத்தில் நேபாள இராச்சியத்தில் தானியங்கி மோட்டார் வாகனங்கள், நகரங்களில் குடிநீர் மற்றும் கழிவு நீர் வடிகால் வசதிகள் மற்றும் பொதுச் சுகாதர முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
விரைவான உண்மைகள் பிரிதிவி வீர விக்ரம் ஷா, ஆட்சி ...
பிரிதிவி வீர விக்ரம் ஷா | |
---|---|
நேபாள மன்னர் | |
ஆட்சி | 17 மே 1881 – 11 டிசம்பர் 1911 |
முடிசூட்டு விழா | 1 டிசம்பர் 1881[1] |
முன்னிருந்தவர் | சுரேந்திர விக்ரம் ஷா |
பின்வந்தவர் | திரிபுவன் வீர விக்ரம் ஷா |
துணைவர் | ராமன் இராச்சிய லெட்சுமி தேவி திவ்யேஷ்வரி லெட்சுமி தேவி கீர்த்தி ராஜ்ஜிய லெட்சு தேவி துர்கா இராச்சிய லெட்சுமி தேவி |
வாரிசு(கள்) | இளவரசு லெட்சுமி இளவரசி தாரா இளவரசி சுமன் திரிபுவன் வீர விக்ரம் ஷா |
Dynasty | ஷா வம்சம் |
தந்தை | திரிலோக்கிய வீர விக்ரம் ஷா |
தாய் | லலிதா ராஜேஸ்வரி ராஜ்ஜிய லெட்சுமி தேவி |
பிறப்பு | 18 ஆகஸ்டு 1875 காத்மாண்டு, நேபாளம் |
இறப்பு | 11 டிசம்பர் 1911 (அகவை, 36) (நஞ்சூட்டிக் கொல்லப்படுதல்) காத்மாண்டு, நேபாளம் |
சமயம் | இந்து சமயம் |
மூடு
மன்னர் பிரிதிவியின் மூத்த இளவரசி லெட்சுமியை ராணா வம்சத்தின் தலைமைப் படைத்தலைவர் கைசர் சாம்செர் ஜங் பகதூர் ராணாவிற்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.[2]
11 டிசம்பர் 1911ல் மன்னர் பிரிதிவி வீர விக்ரம் ஷா காலமான போது, இளவரசர் திரிபுவன் வீர விக்ரம் ஷா சிறு குழந்தையாக இருந்ததால், பருவ வயது எட்டும் வரை, இளவரசி லெட்சுமி தேவி, நேபாள அரசப் பிரதிநிதியாகச் செயல்பட்டார்.[3]