ராணா வம்சம்
From Wikipedia, the free encyclopedia
ராணா வம்சம் (Rana dynasty) (நேபாளி: राणा वंश, நேபாளத்தை 1846 - 1951 முடிய ஆண்ட, கஸ் ராஜ்புத்திர சர்வாதிகார ராணா வம்சத்தினர் ஆவார். [1] நேபாள இராச்சிய ஷா மன்னர்களின் பரம்பரை தலைமை அமைச்சர் மற்றும் தலைமைப் படைத்தலைவர்களாக இருந்தவர்கள்.
விரைவான உண்மைகள் ராணா வம்சம் राणा वंश, நாடு ...
ராணா வம்சம் राणा वंश | |
---|---|
நாடு | நேபாள இராச்சியம் |
விருதுப் பெயர்கள் | லம்ஜுங் மற்றும் காஸ்கின் மகாராஜா |
நிறுவிய ஆண்டு | 1846 |
நிறுவனர் | ஜங் பகதூர் ராணா |
இறுதி ஆட்சியர் | மோகன் ஷாம்செர் ஜங் பகதூர் ராணா |
தற்போதைய தலைவர் | அரச பதவி ஒழிக்கப்பட்டது |
முடிவுற்ற ஆண்டு | 1951 |
இனம் | கஷ் இராசபுத்திரர் |
மூடு
ராணா வம்சத்தின் ஜங் பகதூர் ராணா என்பவர் 1846ல் நேபாள இராச்சியத்தின் ஆட்சி அதிகாராங்களை கைப்பற்றி, பெயரளவில் ஷா வம்ச மன்னர்களை கைப்பாவை மன்னர்களாக வைத்துக் கொண்டு, அவரும், அவரது பரம்பரையினரும் 1951 முடிய ஆட்சி செலுத்தினார்.
இவ்வம்சத்தினர் தங்களை லம்ஜுங் மற்றும் காஸ்கின் மகாராஜாக்கள் என அழைத்துக் கொண்டனர்.