தொன்மா
From Wikipedia, the free encyclopedia
தொன்மா (Dinosaur, டைனோசர் (கேட்க) என்பது ஊர்வன வகுப்பில் திரியாசிக்கு யுகத்தில் வாழ்ந்த விலங்கினங்களைக் குறிக்கின்றன. இந்த உயிரினம் தற்போது தமிழில் துணுச்சாரை என்று அழைக்கப்படுகிறது. இவற்றின் படிமலர்ச்சி இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளது.[1] இவற்றின் வரலாற்றுக் காலம் ஏறத்தாழ 231 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 241 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கும். அறுதியிட்டு சுமார் 160 மில்லியன் ஆண்டுகள் பூமியின் நிலத்தரையின் மீது முழு வல்லாண்மையுடன் வாழ்ந்து வந்த முதுகெலும்புள்ள விலங்கினங்களைக் குறிக்கின்றன.[2] இவற்றின் வல்லாண்மைக் காலமானது, சுமார் 201 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய திரயாசிக்கு-சூராசைக் யுகங்களின் அழிவுக்குட்பட்ட காலமாகும். இவற்றின் வல்லாண்மை மேலும் தொடர்ந்து சூராசிக்-கிரேட்டேசியசு யுகங்கள் வரை தொடர்ந்து கிரேட்டேசியசு-பாகலியோசீன் யுகத்தில் (ஏறத்தாழ 66 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன்) ஒரு பேரழிவு நிகழ்வு காரணமாக முற்றிலுமாய் அழிந்து போயின.
Life
தொன்மா புதைப்படிவ காலம்:கடந்த டிரையாசிக் காலம் முதல்–ஹாலோசெனெ தற்போது, (231.4 மில்லியன் ஆண்டுகள்– 0) Mya | |
---|---|
தொன்மாக்களின் எலும்புக்கூட்டுத் தொகுப்பு :
கடிகார சுழற்சியில் மேலிருந்து இடது:
(சிறகுள்ள தெரோபோடா),
(மிகப்பெரிய சௌரோபோடா),
(வாத்தைப் போன்ற ஆர்னிதோபோட்),
(கொம்புள்ள செரடாப்சியன்கள்),
(கவசமுள்ள ஸ்டெகொசௌரியா),
(காப்புள்ள அங்கைலோசௌரியா). | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
உயிரிக்கிளை: | Dracohors |
உயிரிக்கிளை: | {{{1}}}
ரிச்சர்டு ஓவன், 1842 |
Major groups | |
|
படிம ஆய்வுகளின்படி சூராசிக்கு யுகத்தில்[3] வாழ்ந்த தொன்மாக்களில் ஒரு வகையான தெரோபோடு என்னும் ஒரேயொரு ஆதி இனத்தின் கிளை மட்டும் தப்பி இன்று பறக்கும் இறக்கைகளுள்ள பறவை இனமாக உள்ளதாக அறிஞர்கள் கருதுகிறார்கள்.[4] இவை மட்டுமே அழிவிலிருந்து எஞ்சிய வாழும் தொன்மாக்களாக அறியப்படுகின்றன. மேலும் இங்கு தொன்மாக்களில் பறவைகள் என குறிப்பிடப்பட்டவையும் நிலத்தில் வாழ்ந்த பறவைத் தொன்மாக்களாகும். இன்று அறியப்பட்ட எல்லா தொன்மாக்களும் ஏறத்தாழ நிலத்தில் தரை மீது வாழ்ந்தனவே; படிமம் கிடைத்ததனடிப்படையில் நீருள்ளோ, பறந்தோ வாழவில்லை.
தொன்மாக்கள் வகைப்பாடு, புறத்தோற்றம், சூழ்நிலை அடிப்படையில் விலங்குலகின் பொதுவான நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. தொல்லியல் ஆய்வின்படி, தொல்லுயிரியலாளர்கள் தொன்மாக்களில் சுமார் 500 பேரினங்களையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்றினங்களையும் வகைப்படுத்தியுள்ளனர். 1970களிலிருந்து நடைபெற்று வரும் ஆய்வுகளின் அடிப்படையில் தொன்மாக்கள், குளிர்-இரத்த விலங்குகளாகவும், வளர்சிதை மாற்றத்திற்குட்பட்டும், பல்வேறு சூழல் தகவமைப்புடன், அவற்றினுள் சமூகத் தொடர்புடையவையாகவும் அறியப்படுகின்றன. மேலும் சில தொன்மாக்கள் ஊனுண்ணிகளாகவும், சில தாவர உண்ணிகளாகவும் இருந்தன.படிமங்களின் அடிப்படையில் தொன்மாக்கள் கூடுகட்டுபவைகளாகவும், முட்டையிடுபவை களாகவும் அறியப்பட்டன.
தொன்மாக்களில் சில இரு காலில் நடப்பவையாகவும், சில நான்கு கால்களில் நடப்பவையாகவும் சில இவ்விரண்டையும் மாறி மாறி செயற்படுத்துபவையாகவும் இருக்கும். பரந்த உடலின் புறவமைப்பில் கொம்புகள், உச்சிமுற்கள், எலும்புக்கவசம், முதுகெலும்பு முள் போன்ற சிறப்புறுப்புகளைக் கொண்டிருந்தன. தொன்மாக்கள் மிக நீண்ட, பருத்த உடலமைப்பைப் பெற்றிருந்தன. சாரோபோடு இனம் சுமார் 39.7 மீட்டர் (130 அடி) நீளத்தையும்,[5] 18 மீட்டர் (59 அடி) உயரமும் கொண்ட மிகப்பெரும் நில வாழ் உயிரினமாக அறியப்படுகிறது. சில தொன்மாக்கள், சான்றாக சிக்சியானிகஸ் சிறிய 50 செ.மீ அளவில் (20 அங்குலம்) அளவே இருந்தன.
தொன்மாக்கள் வாழத் தொடங்கிய காலத்திற்கு சற்று முன்னர்வரை நில உருண்டையில் ஒரேயொரு தொடர்ந்த நிலத்தரைப்பகுதிதான் பெரிய கண்டமாக இருந்ததென்றும், அதனை முற்றுமாய்ச் சூழ்ந்து ஒரேயொரு பெருங்கடல் மட்டும்தான் இருந்தென்றும் அறிஞர்கள் கருதுகின்றனர் (பார்க்க: ஒருநிலக் கொள்கை.) தொன்மாக்கள் வாழ்ந்த பொழுது தரைநிலப்பகுதிகள் கண்டங்களாக பிரிந்து நகரத் தொடங்கிய பொழுதும், இயற்கையாக அமைந்த நிலப்பாலங்கள் வழி தொன்மாக்கள் அன்றிருந்த தரைநிலம் முழுவதும் திரிந்தன.
19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொன்மாக்களின் படிமங்கள் கண்டறியப்பட்ட பின்னர் தொன்மாக்கள் மக்களிடையே மிகவும் பிரபலமாகின. மேலும் ஜுராசிக்பார்க் திரைப்படத்தின் மூலம் தொன்மாக்களைப்பற்றிய கற்பனைக் கதைகள், புதினங்கள், புத்தகங்கள், பொம்மைகள், என அனைவராலும் பரவலாக அறியப்பட்டன.