முதலாம் அக்மோஸ்
From Wikipedia, the free encyclopedia
முதலாம் அக்மோஸ் அல்லது அக்மோஸ் I (Ahmose I) எகிப்தின் பதினெட்டாம் வம்சத்தை நிறுவிய பார்வோன் ஆவார். இவர் தீபை நகரத்தை தலைநகராகக் கொண்டு புது இராச்சியத்தை கிமு 1549 முதல் கிமு 1524 முடிய 25 ஆண்டுகள் ஆண்டார். இவரது தந்தை காமோஸ் 17-ஆம் வம்ச மன்னர் ஆவார். இவரது பாட்டனார் ஆட்சிக் காலத்தில் தீபை நகரத்தில் 15-ஆம் வம்சத்து ஐக்சோஸ் இன பிலிஸ்தியர்கள் செய்த கலகத்தை அடக்கியவர்.
முதலாம் அக்மோஸ் | |
---|---|
அனதோ [1] அமாசிஸ்[2] | |
உடைந்த முதலாம் அக்மோசின் சிற்பம் | |
எகிப்தின் பாரோ | |
ஆட்சிக்காலம் | கிமு 1549–1524 25 ஆண்டுகள் & 4 மாதங்கள், எகிப்தின் பதினெட்டாம் வம்சம் |
முன்னவர் | காமோஸ் (மேல் எகிப்து), காமுடி (கீழ் எகிப்து) |
பின்னவர் | முதலாம் அமென்கோதேப் |
துணைவி(யர்) | நெபர்தாரி, சித்காமோஸ், ஹெனுத்தாமெகூ, கஸ்மூத், தேன்தாபி |
பிள்ளைகள் | அக்மோஸ்-மெரிதாமூன், அக்மோஸ்-சிதாமூன் அக்மோஸ்-அன்க் முதலாம் அமென்கோதேப் ராமோஸ் |
தந்தை | செக்கியுனெரென்ரி தவோ |
தாய் | முதலாம் அக்ஹோதேப் |
இறப்பு | குன்ய் 1525 |
அடக்கம் | அபிதோஸ் |
நினைவுச் சின்னங்கள் | ஆவரிஸ் நகர அரண்மனை, அமூன் கோவில் கர்னாக், மொன்து கோயில், ஹெர்மொன்திஸ் |
முதலாம் அக்மோஸ் ஏழு வயது இருக்கும் போது, அவரது தந்தை செக்கியுனெரென்ரி தவோ கொல்லப்பட்டார்[5] மற்றும் இவரின் பத்து வயதில் உடன் பிற்ந்த சகோதரனும் இறந்தார். எனவே அக்மோஸ் எகிப்தின் பார்வோனாக முடிசூடினார்.[6]
அக்மோஸ் ஆட்சியில் கீழ் எகிப்தை ஆண்ட 15-ஆம் வம்சத்தவர்களான பிலிஸ்திய ஐக்சோஸ் மக்களை நைல் நதி வடிநிலத்திலிருந்து விரட்டியடித்து, கீழ் எகிப்தை, மேல் எகிப்துடன் இணைத்தார். மேலும் தெற்கு எகிப்திற்கு தெற்கில் உள்ள நூபியா மற்றும் சினாய் தீபகற்பம் அருகே உள்ள கானானிய பகுதிகளை கைப்பற்றினார். [6]