பாரம்பரிய கிரேக்கம்
பண்டைய கிரேக்கத்தின் கிமு 510 முதல் 323 வரையிலான காலம் / From Wikipedia, the free encyclopedia
பாரம்பரிய கிரேக்கம் (Classical Greece) என்பது பண்டைய கிரேக்கத்தில் சுமார் 200 ஆண்டுகள் (கிமு 5 மற்றும் 4 ஆம் நூற்றாண்டுகள்) ஆகும்.[1] பாரசீக கலாச்சாரத்தின் பாதிப்பில் இருந்த கிழக்கு ஏஜியன் மற்றும் வடக்குப் பகுதிகள் ( ஐயோனியா மற்றும் மாசிடோனியா போன்றவை) பாரசீகத்திலிருந்து சுயாட்சியைப் பெற்றன. சனநாயக ஏதென்சு அதன் உச்ச நிலைக்கு சென்றது. முதல் மற்றும் இரண்டாம் பெலோபொன்னேசியப் போர்கள்; எசுபார்தன் மற்றும் தீப்சின் மேலாதிக்கங்கள்; மற்றும் இரண்டாம் பிலிப்பின் தலைமையில் மாக்கெடோனியாவின் விரிவாக்கம். மேற்கத்திய நாகரீகத்தின் துவக்கக்கால அரசியல், கலை சிந்தனை (கட்டடக்கலை, சிற்பம்), அறிவியல் சிந்தனை, நாடகம், இலக்கியம், மேற்கத்திய நாகரிகத்தின் மெய்யியல் ஆகியவை கிரேக்க வரலாற்றின் இந்த காலகட்டத்திலிருந்து வந்தவையே. இவை பிற்கால உரோமைப் பேரரசில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. பாரசீகப் பேரரசான பொது எதிரிக்கு எதிராக கிரேக்க உலகின் பெரும்பாலான பகுதிகளை இரண்டாம் பிலிப் ஒன்றிணைத்தார். பிலிப்பின் மகன் பேரரசர் அலெக்சாந்தரின் போர்களின் போது 13 ஆண்டுகளுக்குள் பாரசீகப் பேரரசின் பகுதிகள் கைப்பற்றபட்டன. இதன் பின்னர் பாரம்பரிய காலம் முடிந்தது.
பண்டைக் கிரேக்கத்தின் கலை, கட்டடக்கலை, கலாச்சாரத்தின் பின்னணியில், பாரம்பரிய காலம் கிமு 5 மற்றும் 4 ஆம் நூற்றாண்டுகளுக்கு ஒத்திருக்கிறது (மிகவும் பொதுவான காலம் கிமு 510 இல் கடைசி ஏதெனியன் சர்வாதிகாரியின் வீழ்ச்சியிலிருந்து கிமு 323 இல் அலெக்சாந்தரின் மரணம் வரையிலான காலம்). இந்த பொருளில் பாரம்பரிய காலமானது கிரேக்க இருண்ட காலம் மற்றும் தொன்மையான காலத்தை அடுத்து வருகிறது. பாரம்பரிய காலத்தை அடுத்து எலனியக் காலம் வருகிறது.