வேம்பநாட்டு ஏரி
இந்தியாவிலேயே மிகவும் நீளமான ஏரி / From Wikipedia, the free encyclopedia
வேம்பநாட்டு ஏரி அல்லது வேம்பநாட்டுக் காயல் இந்தியாவிலேயே மிகவும் நீளமான ஏரியாகும்.[1] கேரளத்தின் மிகப்பெரிய ஏரியான இது இந்தியாவின் பெரும் ஏரிகளுள் ஒன்று.
விரைவான உண்மைகள் வேம்பநாட்டு ஏரி, ஆள்கூறுகள் ...
வேம்பநாட்டு ஏரி | |
---|---|
ஆள்கூறுகள் | 9°35′N 76°25′E |
முதன்மை வரத்து | அச்சன்கோவில் ஆறு, மணிமாலா ஆறு, மீனச்சில் ஆறு, மூவாற்றுப்புழை, பம்பை, பெரியாறு |
முதன்மை வெளியேற்றம் | பல வாய்க்கால்கள் |
வடிநில நாடுகள் | இந்தியா |
அதிகபட்ச நீளம் | 96 கிமீ |
அதிகபட்ச அகலம் | 14 கீமீ |
மேற்பரப்பளவு | 1512 கி.மீ² |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 0 மீ |
குடியேற்றங்கள் | ஆலப்புழா, கொச்சி, செர்த்தலா |
மூடு
இந்தக் காயலின் பரப்பளவு 1512 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். ஆழப்புழா, எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்கள் இவ் ஏரியின் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்த ஏரி அரபிக்கடலின் மட்டத்திலேயே இருக்கிறது. ஏரியையும் கடலையும் சிறு குறுகிய நிலப்பரப்பு பிரிக்கிறது. பெரியாறு, மீனச்சில், பம்பா முதலிய ஆறுகள் இந்த ஏரியில் கலக்கின்றன.