வாட்டர்லூ போர்
ஐரோப்பிய போர் / From Wikipedia, the free encyclopedia
வாட்டர்லூ போர் (Battle of Waterloo) நெதர்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் அங்கமாகவிருந்த (தற்போதைய பெல்ஜியம்) வாட்டர்லூ என்ற இடத்தில் சூன் 18, 1815, ஞாயிறன்று நிகழ்ந்த சண்டையாகும். வெல்லிங்டன் பிரபு தலைமையேற்ற ஆங்கிலேயர் படைகளும் வாகிசட் இளவரசர் தலைமையேற்ற பிரசியப் படைகளும் இணைந்து நெப்போலியன் தலைமையேற்ற பிரான்சியப் படைகள் மீது தொடுத்த போராகும். 26 ஆண்டுகளாக நடந்து வந்த பிரெஞ்சுப் புரட்சிப் போருக்கும் நெப்போலியப் போர்களுக்கும் இந்தச் சண்டை மூலம் ஓர் முடிவு எட்டியது. பிரான்ஸ் நாட்டின் பேரரசராகவும், சிறந்த படைத்தலைவராகவும் விளங்கிய நெப்போலியன் இறுதியாகத் தோல்வியற்றார். இத்தோல்வியினால், ஐரோப்பா முழுவதையும் தம் ஆட்சிக்குள் கொண்டுவர வேண்டுமென்ற நெப்போலியனின் பேராசை அழிந்தொழிந்தது.
விரைவான உண்மைகள் வாட்டர்லூ போர், நாள் ...
வாட்டர்லூ போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
வாட்டர்லூ போர் - வில்லியம் சேடுலர் வரைந்தது |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
பிரான்சியப் பேரரசு | ஏழாம் கூட்டணி:
|
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
பிரான்சின் முதலாம் நெப்போலியன் | வெல்லிங்டன் பிரபு கெபெர்ட் லீபெரெக்டு வான் புளூசர் |
||||||
பலம் | |||||||
மொத்தம்: 73,000[1]
| மொத்தம்: 118,000 ஆங்கிலக்-கூட்டணி: 68,000[2][3]
பிரசியர்கள்: 50,000[6] |
||||||
இழப்புகள் | |||||||
மொத்தம்: 41,000 | மொத்தம்: 24,000 ஆங்கிலக் கூட்டணி: 17,000
பிரசியர்கள்: 7,000
|
மூடு