வத்திக்கான் நகர்
From Wikipedia, the free encyclopedia
வத்திக்கான் நகர் (Vatican City) இத்தாலி நாட்டின் உரோம் நகரிலுள்ள ஒரு தன்னாட்சியுடைய சுதந்திர நாடாகும். இதன் அரசியல் தலைவர் திருத்தந்தையாவார். வத்திக்கான் நகரத்தில் இவரின் அதிகாரப்பூர்வ உறைவிடமும் அலுவலகமும் அமைந்துள்ள கட்டடம் திருத்தூதரக அரண்மனை என அழைக்கப்படுகிறது. எனவே கத்தோலிக்க கிறித்தவத்தின் தலைமை மையமாக வத்திக்கான் நகரம் திகழ்கிறது. இதன் மொத்தப் பரப்பளவு 44 எக்டேர் (108.7 ஏக்கர்) ஆகவும், 2017 கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1000 ஆகவும் இருக்கிறது.[1] ஆதலால், இதுவே பரப்பளவு மற்றும் மக்கட்தொகை அடிப்படையில் உலகின் மிகச்சிறிய நாடாகும்.
வத்திக்கான் நகர-நாடு Status Civitatis Vaticanae Stato della Città del Vaticano | |
---|---|
நாட்டுப்பண்: ஓ பேறுபெற்ற உரோமையே (இலத்தீன் மொழி) Hymn and Pontifical March | |
தலைநகரம் | வத்திக்கான் நகர்1 |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | இலத்தீன்2, இத்தாலிய மொழி, பிரெஞ்சு மற்றும் யேர்மன் மொழி. |
அரசாங்கம் | சமயச் சார்புடைய முடியாட்சி elective3 monarchy |
பிரான்சிசு | |
• வெளியுறவு அமைச்சர் Secretary of State | கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே Tarcisio Cardinal Bertone |
• பொறுப்பாளர் | பேராயர் ஜொவான்னி லஜோலோGiovanni Lajolo |
தன்னாட்சி இத்தாலி பேரரசிடமிருந்து | |
• இலாத்தரன் உடன்படிக்கை | பெப்ரவரி 11 1929 |
பரப்பு | |
• மொத்தம் | 0.44 km2 (0.17 sq mi) (232வது) |
மக்கள் தொகை | |
• 2017 மதிப்பிடு | 1000[1] (229வது) |
நாணயம் | ஐரோ (€)4 (EUR) |
நேர வலயம் | ஒ.அ.நே+1 (CET) |
ஒ.அ.நே+2 (CEST) | |
அழைப்புக்குறி | 395 |
இணையக் குறி | .va |
1வத்திக்கான் நகர் ஒரு நகர அரசு ஆகும். 2 இத்தாலியம், இடாய்ச்சு, எசுப்பானியம், பிரெஞ்சு, மற்றும் போர்த்துக்கேயம் இங்கே அதிகம் பயன்படுத்தப்படும் மொழிகலாம். The language of the Papal Swiss Guard is German. The diplomatic language is French. 3 நாட்டு குடியுரிமை கர்தினால்களுக்கு மட்டுமே உரியது. 4 Prior to 2002, the Vatican lira (on par with the Italian lira). 5 ITU-T assigns code 379 to Vatican City. However, Vatican City is included in the Italian telephone numbering plan and uses the Italian country code 39. |
இது ஒரு திருச்சபை [1] அல்லது புனித தலம்-முடியாட்சி [2] நாடு (ஒரு வகையான அரசியலமைப்பு) இதை ஆள்பவர் ரோமின் பிஷப்பான - போப் ஆவார். இதன் உயர்நிலை அலுவலர்கள் அனைவரும் பல்வேறு தேசிய மரபுகளைச் சேர்ந்த கத்தோலிக்க குருமார்களாவர். 1377 ஆம் ஆண்டில் அவிஞானில் இருந்து போப் இங்கு திரும்பியதிலிருந்து, அவர்கள் இப்போது வத்திக்கான் நகரத்தில் உள்ள திருத்தூதரக அரண்மனையில் வசித்து வந்தனர்.
வத்திக்கான் நகரம் 1929ஆம் ஆண்டு முதல் நிலைத்திருக்கும் ஒரு நகர-நாடு. 1929இல் தன்னாட்சி நாடாக உருவெடுத்த வத்திக்கான் நகரத்தைக் கிறித்தவ சமயத்தின் தொடக்கத்திலிருந்தே நிலைத்துவருகின்ற திருப்பீடத்திலிருந்து (Holy See) வேறுபடுத்திக் காண வேண்டும். வத்திக்கான் நகரின் அரசாணைகள் இத்தாலிய மொழியிலும்; திருப்பீடத்தின் அரசாங்க ஆவணங்கள் இலத்தீன் மொழியிலும் வெளியிடப்படுகின்றன. இரு ஆட்சியமைப்புககளுக்கும் வெவ்வேறு கடவுச்சீட்டுக்கள் உள்ளன: நாடில்லாத திருப்பீடம் வெறும் அரசுதொடர்புடைய மற்றும் சேவை கடவுச்சீட்டுகளை பிறப்பிக்கின்றது; வத்திக்கான் நகரம் குடியுறிமை கடவுச்சீட்டுக்களை பிறப்பிக்கின்றது. இரண்டு அரசுகளுமே குறைந்த அளவிலேயே கடவுச்சீட்டுக்களை பிறப்பிக்கின்றன.
1929ஆம் ஆண்டு இலாத்தரன் உடன்படிக்கை மூலமாக உருவான வத்திக்கான் நகர் ஒரு புதிய உருவாக்கமாகவே அமைந்தது. முந்தைய மத்திய இத்தாலியை உள்ளக்கியிருந்த திருத்தந்தை நாடுகளின்(756-1870) சுவடாக இதனை யாரும் கருதுவதில்லை. 1860-ஆம் ஆண்டு திருத்தந்தை நாடுகள் முழுதும் இத்தாலி முடியரசோடு சேர்க்கப்பட்டது. இருதியாக உரோமை நகரமும் அதன் சுற்று பகுதியும் 1870இல் சேர்க்கப்பட்டது.
வத்திக்கான் நகரத்தில் புனித பேதுரு பேராலயம், சிஸ்டைன் சிற்றாலயம், வத்திக்கான் அருங்காட்சியகங்கள் போன்ற சமய மற்றும் கலாச்சார தளங்கள் உள்ளன. இவை உலகின் மிகப் பிரபலமான ஓவியங்கள் மற்றும் சிற்பங்களைக் கொண்டுள்ளன. வத்திக்கான் நகரத்தின் தனித்துவமான பொருளாதாரமானது அஞ்சல்தலைகள் மற்றும் சுற்றுலாப் பொருட்களின் விற்பனை, அருங்காட்சியகங்களுக்கான நுழைவுக் கட்டணம், மற்றும் வெளியீடுகளின் விற்பனை ஆகியவற்றால் திரளும் நிதி ஆதரவைக் கொண்டுள்ளது.