வங்காளப் புலி
From Wikipedia, the free encyclopedia
வங்காளப் புலி (Panthera tigris tigris) புலியினத்தில் ஒரு சிற்றினம் ஆகும்.[2] பூனை குடும்பத்தில் இன்று வாழும் மிகப்பெரிய உயிரினங்களில் இதுவும் ஒன்றாகும்.[3][4][5]
வங்காளப் புலி Bengal TIger | |
---|---|
வங்காளப் புலி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | |
துணையினம்: | வங்காளப் புலி (tigris) |
முச்சொற் பெயரீடு | |
பாந்தெரா டைக்ரிஸ் டைக்ரிஸ் Panthera tigris tigris (L, 1758) |
இந்தப் புலிகள் இந்திய துணைக்கண்டத்தில் ஏறத்தாழ 12,000 முதல் 16,500 ஆண்டுகள் முன்பிருந்து வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[6][7][8] இன்று வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு போன்றவற்றால் இந்த இனம் அச்சுறுத்தப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு 2,500க்கும் குறைவான புலிகளே காட்டு பகுதிகளில் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[9]
வங்காளப் புலி 19 ஆம் நூற்றாண்டு வரை மேற்கே சிந்து நதி பள்ளத்தாக்கிலிருந்து கிட்டத்தட்ட இந்தியா முழுவதும், பாக்கித்தான், தெற்கு நேபாளம், வங்காளதேசம், பூட்டான், மியன்மார் மற்றும் தென்மேற்கு சீனா ஆகிய நாடுகளில் காணப்பட்டது. ஆனால் இன்று, இது இந்தியா, வங்காளதேசம், நேபாளம், பூட்டான் மற்றும் தென்மேற்கு சீனாவில் மட்டுமே வாழ்கிறது.[7] 2018 ஆம் ஆண்டின் கணக்குப்படி இவற்றில் பெரும்பாலான புலிகளின் (ஏறத்தாழ 2,603–3,346) இந்தியாவில் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. புலிகள் மற்றும் அதன் வசிப்பிடங்களை பாதுகாக்க இந்திய அரசால் புலிகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இவை காடுகள், வெப்பமண்டலப் பகுதிகள் எனப் பல்வேறு வகையான சூழ்நிலைகளில் வாழ்கின்றன. இவற்றின் தோல் பழுப்பு நிறத்தில் கருப்புக்கோடுகளுடன் காணப்படுகிறது. எனினும் வெள்ளைப்புலிகளும் உண்டு. வங்காளப் புலி, இந்தியா மற்றும் வங்காளதேசத்தின் தேசிய விலங்காக உள்ளது.