மூன்றாம் அமெனம்ஹத்
From Wikipedia, the free encyclopedia
மூன்றாம் அமெனம்ஹத் (Amenemhat III), also spelled Amenemhet III,) பண்டைய எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை ஆண்ட பனிரெண்டாம் வம்த்தின் ஆறாம் பார்வோன் ஆவார். மூன்றாம் அமெனம்ஹத் எகிப்தை கிமு 1860 முதல் கிமு 1814 முடிய 46 ஆண்டுகள் ஆண்டார்.[2] இவரது ஆட்சிக் காலம் மத்தியகால இராச்சியத்தின் பொற்காலம் என அழைப்பர்[3] இவர் இவரது தந்தை பார்வோன் மூன்றாம் செனுஸ்ரேத்துடன் 20 ஆண்டுகள் ஆட்சியை பங்கிட்டு ஆண்டார்.[4]
மூன்றாம் அமெனம்ஹத் | |
---|---|
பார்வோன் மூன்றாம் அமெனம்ஹத்தின் தலைச்சிற்பம் | |
எகிப்தின் பாரோ | |
ஆட்சிக்காலம் | கிமு 1860–1814, எகிப்தின் பன்னிரண்டாம் வம்சம் |
முன்னவர் | மூன்றாம் செனுஸ்ரெத் |
பின்னவர் | நான்காம் அமெனம்ஹத் |
துணைவி(யர்) | 2 |
பிள்ளைகள் | நான்காம் அமெனம்ஹத் உள்ளிட்ட ஐவர் |
தந்தை | மூன்றாம் செனுஸ்ரெத் |
இறப்பு | கிமு 1814 |
அடக்கம் | ஹவாரா பிரமிடு |
நினைவுச் சின்னங்கள் | ஹவாரா பிரமிடு, தச்சூர் |
இவர் தனது ஆட்சியின் இறுதி காலத்தில், தனது மகனும், இளவரசருமான நான்காம் அமெனம்ஹத்துடன் கூட்டாக ஆட்சி செய்தார்.[5] இவரது மகன் நான்காம் அமெனத்ஹத்திற்குப் பின் இவரது மகள் சோபெக்நெபெரு, நிமாத்திரி எனும் பெயருடன் எகிப்தை ஆண்டார்.
பார்வோன் மூன்றாம் அமெனம்ஹத் தச்சூரில் தனது இறப்பிற்கு பின் அடக்கத்திற்காக கருப்புக் கல்லறை பிரமிடை கட்டும் போது எழுந்த பிரச்சினையால் பாதியிலே கைவிட்டார்.[6] பின்னர் 15 ஆண்டுகள் கழித்து தனது கல்லறை பிரமிடை பையும் அருகே உள்ள ஹவராவில் கல்லறைக் கோயிலுடன் கட்டிக்கொண்டார்.[7] தச்சூர் பிரமிடில் அரச குடும்ப உறுப்பினர்களின் சடலங்கள் புதைக்கப்ப்ட்டது.
- மூன்றாம் அமெனம்ஹத்தின் கருப்பு பிரமிடு
- மூன்றாம் அமெனம்ஹத்தின் தலைச்சிற்பம்
- மூன்றாம் அமெனம்ஹத்தின் தலைச்சிற்பம்
- மூன்றாம் அமெனம்ஹத்தின் சிலை