நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு
From Wikipedia, the free encyclopedia
நேச நாடுகளின் சிசிலியப் படையெடுப்பு (Allied invasion of Sicily) என்பது இரண்டாம் உலகப் போரின் போது நடைபெற்ற ஒரு பெரும் படையெடுப்பு. ஹஸ்கி நடவடிக்கை (Operation Husky) என்று குறிப்பெயரிடப்பட்ட இதில் நேச நாட்டுப் படைகள் பாசிச இத்தாலியின் ஒரு பகுதியான சிசிலி தீவின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றின. இத்தாலியப் போர்த்தொடரின் ஒரு பகுதியான இது சிசிலியப் போர்த்தொடர் (Sicilian Campaign) என்றும் அழைக்கப்படுகிறது.
சிசிலியப் படையெடுப்பு | |||||||
---|---|---|---|---|---|---|---|
இத்தாலியப் போர்த்தொடரின் பகுதி | |||||||
ஜெர்மானிய குண்டுவீசி வானூர்திகளால் தாக்கப்பட்ட அமெரிக்க சரக்குக் கப்பல் ராபர்ட் ரோவான் வெடித்து சிதறுகிறது (கேலா கடற்கரை; சிசிலி, ஜூலை 11, 1943) |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
நேச நாடுகள்: ஐக்கிய இராச்சியம் ஐக்கிய அமெரிக்கா கனடா சுதந்திர பிரான்ஸ் | அச்சு நாடுகள்: இத்தாலி ஜெர்மனி |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
டுவைட் டி. ஐசனாவர் ஹரால்ட் அலெக்சாந்தர் பெர்னார்ட் மோண்ட்கோமரி ஆர்த்தர் டெட்டர் ஜார்ஜ் பேட்டன் | ஆல்பர்ட் கெஸ்சல்ரிங் அல்ஃபிரட் குசோனி ஃபிரிடோலின் வோன் செங்கர் ஹான்சு வாலெண்டின் வோன் ஹூபே |
||||||
பலம் | |||||||
160,000 பேர் 14,000 வண்டிகள் 600 டாங்குகள் 1,800 பீரங்கிகள் | 230,000 இத்தாலியர்கள் 40,000 ஜெர்மானியர்கள்[1] 260 டாங்குகள் 1,400 வானூர்திகள்[2] |
||||||
இழப்புகள் | |||||||
22,000 பேர்[nb 1] | ஜெர்மனி: 10,000 பேர் இத்தாலி: 132,000 பேர்(பெரும்பாலும் போர்க்கைதிகள்)[nb 2] |
வான்வழியாகவும் கடல்வழியாகவும் ஜூலை 7, 1943ல் சிசிலியில் தரையிறங்கிய நேச நாட்டுப் படைகள், ஆறு வாரகால கடும் சண்டைக்குப் பின்னர் சிசிலித் தீவினை முழுதும் கைப்பற்றினர். ஆகஸ்ட் 17 அன்று சிசிலியில் இருந்த அச்சுப் படைகள் அனைத்தும் அத்தீவினைக் காலி செய்துவிட்டு இத்தாலிக்கு பின்வாங்கிவிட்டன. சிசிலியின் வீழ்ச்சியால், நடுநிலக்கடலின் கடல் வழிகள் அனைத்தும் நேச நாட்டுப் படைகளின் வசமாயின. சிசிலி அடுத்து நிகழ்ந்த இத்தாலியப் படையெடுப்புக்கு தளமாகப் பயன்பட்டது. மேலும் இத்தோல்வியின் விளைவாக, இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.