நேச நாடுகளின் இத்தாலியப் படையெடுப்பு
From Wikipedia, the free encyclopedia
நேச நாடுகளின் இத்தாலியப் படையெடுப்பு (Allied invasion of Italy) என்பது இரண்டாம் உலகப் போரின் போது நடைபெற்ற ஒரு பெரும் படையெடுப்பு. இத்தாலியப் போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் நேச நாட்டுப் படைகள் பாசிச இத்தாலியின் மீது படையெடுத்தன. இப்படையெடுப்பு மூன்று பெரும் கட்டங்களாக நடைபெற்றது. அவலான்ச் நடவடிக்கை (Operation Avalanche) என்று குறிப்பெயரிடப்பட்ட முதன்மைத் தாக்குதலில் இத்தாலியின் மேற்கு கடற்கரையில் சலேர்னோ நகரருகே நேச நாட்டுப் படைகள் தரையிறங்கின. அவற்றுக்குத் துணையாக கலபிரியா பகுதியில், டாரண்டோ நகரத்தின் அருகிலும் மேலும் இரு தரையிறக்கங்கள் நடைபெற்றன.
இத்தாலியப் படையெடுப்பு | |||||||
---|---|---|---|---|---|---|---|
இத்தாலியப் போர்த்தொடரின் பகுதி | |||||||
சலேர்னோ கடற்கரையில் பீரங்கித் தாக்குதலுக்கிடையே தரையிறங்கும் நேச நாட்டுப் படைகள் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய இராச்சியம் கனடா டென்மார்க் நோர்வே சுதந்திர பிரான்ஸ் | ஜெர்மனி இத்தாலி (செப்டம்பர் 8 வரை) |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஹரால்ட் அலெக்சாந்தர் பெர்னார்ட் மோண்ட்கோமரி மார்க் கிளார்க் | ஆல்பர்ட் கெஸ்சல்ரிங் ஹைன்ரிக் வோன் வெய்டிங்கோஃப் |
||||||
பலம் | |||||||
189,000 (செப்டம்பர் 16) | 100,000 | ||||||
இழப்புகள் | |||||||
2,009 கொல்லப்பட்டனர் 7,050 காயமடைந்தனர் 3,501 காணாமல் போயினர் | 3,500 பேர் |
இப்படையெடுப்பால், இத்தாலி நேச நாடுகளிடம் சரணடைந்தது. ஆனால் இத்தாலியர்கள் அணிமாறிவிடுவார்கள் என்பதை எதிர்பார்த்த ஜெர்மானியர்கள் இத்தாலியை ஆக்கிரமித்து, இத்தாலியப் படைகளின் ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர். முன்னாள் பாசிச சர்வாதிகாரி முசோலினி தலைமையில் ஒரு கைப்பாவை இத்தாலிய அரசையும் தோற்றுவித்தனர். இப்படையெடுப்பின் முடிவில் தெற்கு இத்தாலி முழுவதும் நேச நாட்டுக் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.