நியமசபா மந்திரம்
கேரள சட்டமன்ற கட்டடம் / From Wikipedia, the free encyclopedia
நியமசபா மந்திரம் (Niyamasabha Mandiram) என்பது திருவனந்தபுரத்தின் பாளையத்தில் அமைந்துள்ள ஒரு அரசு கடடம் ஆகும். இது கேரள சட்டமன்றம் அல்லது நியமசபா அமைந்துள்ள இடமாகும். இந்த வளாகமானது பல சமகால கட்டடக்கலை பாணிகளின் வலுவான தாக்கங்களுடன், பாரம்பரிய கேரளக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. இது பிரமாண்டமான படிக்கட்டுகள், பூங்காக்கள், நீர்நிலைகள் போன்றவற்றுடன் பெரிய சட்டமன்ற மண்டபத்தைக் கொண்ட ஒரு கட்டமைப்பாகும். உயர் பாதுகாப்பு மண்டலத்தில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் நியமசபா அவைத்தலைவர், அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களின் அலுவலகங்கள், மற்றும் சுயாதீன ஆணையங்கள் மற்றும் அமைப்புகளின் அலுவலகங்கள் உள்ளன. இந்த சட்டமன்ற வளாகமானது 22 மே 1998 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர், கே. ஆர். நாராயணனால் திறந்து வைக்கப்பட்டது. [1]
விரைவான உண்மைகள் நியமசபா மந்திரம், பொதுவான தகவல்கள் ...
நியமசபா மந்திரம் | |
---|---|
നിയമസഭാ മന്ദിരം | |
கேரள சட்டப்பேரவையின் இடமான நியமசபா மந்திரம் | |
பொதுவான தகவல்கள் | |
வகை | கேரள சட்டமன்ற கட்டடம் |
கட்டிடக்கலை பாணி | கேரளக் கட்டிடக்கலை |
இடம் | கேரளம், திருவனந்தபுரம், பாளையம் |
நாடு | இந்தியா |
ஆள்கூற்று | 8.5067°N 76.9487°E / 8.5067; 76.9487 |
கட்டுமான ஆரம்பம் | 1979 |
நிறைவுற்றது | 1998 |
செலவு | ₹9 பில்லியன் (US$110 மில்லியன்) |
உரிமையாளர் | கேரள அரசு |
உயரம் | 200 அடிகள் (61 m) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 5 + 1 basement |
தளப்பரப்பு | 802,453 சதுர அடிகள் (74,550.3 m2) |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | கேரள பொதுப்பணித் துறை |
குடிசார் பொறியாளர் | கேரள பொதுப்பணித் துறை |
முதன்மை ஒப்பந்தகாரர் | கேரள மாநில கட்டுமானக் கழகம் |
மூடு