உருசிய உள்நாட்டுப் போர்
சோவியத் யூனியன் தொடக்கம் / From Wikipedia, the free encyclopedia
உருசிய உள்நாட்டுப் போர் (Russian Civil War) எனப்படுவது நவம்பர் 7 (அக்டோபர் 25) 1917 முதல் அக்டோபர் 1922 வரை[1] முன்னாள் உருசியப் பேரரசில் போல்சேவிக் செஞ்சேனைக்கும் வெண்சேனைக்கும் இடையே நிகழ்ந்த பலகட்சிப் போரை குறிப்பதாகும். பல வெளிநாட்டு படைகள், குறிப்பாக கூட்டணி படைகளும் செருமனிசார் படைகளும் செஞ்சேனையுடன் போரிட்டன.[4] செஞ்சேனை வெண்சேனையை உக்ரைனிலும் அலெக்சாண்டர் கோல்செக் தலைமையில் அமைந்த அணியை சைபீரியாவிலும் 1919இல் வென்றது. மிஞ்சிய வெண்சேனையை பியோடர் நிகோலயெவிச் ராங்கெல் வழிநடத்தினார்; 1920 குளிர்காலத்தில் இந்த அணியையும் கிரீமியாவில் செஞ்சேனை வென்றது. உருசியப் பேரரசு உடைந்தநிலையில் பல விடுதலை இயக்கங்கள் உருவாகின; இவையும் இப்போரில் பங்கேற்றன.[2] இவற்றில் பல – பின்லாந்து, எசுத்தோனியா, லாத்வியா, லித்துவேனியா, போலந்து – இறைமையுள்ள நாடுகளாக நிறுவப்பட்டன. உருசியப் பேரரசின் மிஞ்சியப் பகுதிகள் சோவியத் ஒன்றியமாக ஒன்றிணைக்கப்பட்டன.
உருசிய உள்நாட்டுப் போர் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
முதல் உலகப் போர் மற்றும் 1917–23 காலகட்ட புரட்சிகள் பகுதி | |||||||||
போரின்போது செஞ்சேனை |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
உருசிய சோவியத் கூட்டு சோசலிச குடியரசு மற்றும் பிற சோவியத் குடியரசுகள்
புரட்சி உக்ரானிய எழுச்சிப் படை (1918–20) | வெள்ளை இயக்கம்
உள்ளிட்டவை புதியதாக உருவான குடியரசுகள் உள்ளிட்டவை
கூட்டணி இடையீடு மற்றும் பிறர்
செருமானிய ஆதரவு படைகள் உள்ளிட்டவை
பிற குழுக்கள்
|
||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
விளாடிமிர் லெனின் லியோன் திரொட்ஸ்கி மிக்கைல் துக்காசெவ்சுகி | அலெக்சாண்டர் கொல்சக் † லாவ்ர் கோர்னிலோவ் † அன்டன் டெனிகன் பியோடர் ராங்கிள் |
||||||||
பலம் | |||||||||
3,000,000[3] | 2,400,000 வெள்ளை உருசியர்கள், 255,000 கூட்டணி குறுக்கீட்டாளர்கள். | ||||||||
இழப்புகள் | |||||||||
1,212,824 உயிரிழப்பு
தரவுகள் முழுமையாக இல்லை.[3] | குறைந்தது 1,500,000 |