இரத்தினபுரி
சபரகமுவா மாகாணத்தின் தலைநகரம் / From Wikipedia, the free encyclopedia
இரத்தினபுரி (சிங்களம்: රත්නපුර , ஆங்கிலம்: Ratnapura) இலங்கையின் முக்கிய நகரங்களில் ஒன்றும், சபரகமுவா மாகாணத்தின் தலைநகரமுமாகும். இரத்தினபுரி என்பது இந்நகரம் அமைந்துள்ள இரத்தினபுரி மாவட்டத்தையும் இதன் நிர்வாக அலகான இரத்தினபுரி பிரதேச செயளர் பிரிவையும் குறிக்கும். கொழும்புக்கு கிழக்கே, கொழும்பையும் கிழக்கு மாகாணத்தின் கல்முனையையும் இணைக்கு ஏ-4 பெருந்தெருவில் 101 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இரத்தினக்கல் அகழ்வை விட இந்நகரம் தேயிலை இறப்பர் பெருந்தோட்டங்களுக்கும், கித்துள் வெல்லத்துக்கும் பிரசித்திபெற்றது. முன்பு நெற்பயிர் செய்கை நன்கு மேற்கொள்ளப் பட்டிருந்தாலும் இரத்தினகல் அகழ்விற்கு அதிக நிலப்பரப்பு ஒதுக்கப்படுவதால் நெற்பயிர் செய்கை வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
விரைவான உண்மைகள்
இரத்தினபுரி | |
மாகாணம் - மாவட்டம் |
சபரகமுவா - இரத்தினபுரி |
அமைவிடம் | 6.7°N 80.381°E / 6.7; 80.381 |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 100 மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
நகரத் தந்தை | |
குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- 70000 - +9445 - SAB |
மூடு