வல்லர்பாடம்
கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்ட சிற்றூர் / From Wikipedia, the free encyclopedia
வல்லார்பாடம் (மலையாளம்: വല്ലാർപാടം) என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தில், கொச்சியின் ஒரு பகுதியாக விளங்கும் தீவுக் கூட்டங்களில் உள்ள ஒரு தீவாகும். இது வேம்பநாட்டு ஏரியில் அமைந்துள்ளது. இது கொச்சி ஏரி என்றும் அழைக்கபடுகிறது. 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ள இரண்டு தீவுகளில் வல்லர்பாடம் தீவும் ஒன்றாகும், மற்றொன்று வில்லிங்க்டன் தீவு ஆகும் இதைச் சுற்றி கொச்சி துறைமுகம் அமைந்துள்ளது. துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் நிலையம் முழுக்க வல்லார்பாடம் தீவில் அமைந்துள்ளது. வைப்பீன் தீவு இதன் மேற்குப் பக்கத்திலும், முலவுகாட் தீவு இதன் கிழக்கிலும் அமைந்துள்ளன.
விரைவான உண்மைகள் வல்லார்பாடம், நாடு ...
வல்லார்பாடம் | |
---|---|
தீவு | |
ஆள்கூறுகள்: 9.990°N 76.255°E / 9.990; 76.255 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | எறணாகுளம் |
அரசு | |
• நிர்வாகம் | முலுவாக்குடு பஞ்சாயத்து |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
தொலைபேசி குறியீடு | 0484 |
வாகனப் பதிவு | KL-7 |
City | Kochi |
மக்களவை தொகுதி | எறணாகுளம் |
குடிமை முகமை | முலுவாக்குடு பஞ்சாயத்து |
மூடு