தி பிளிட்ஸ்
From Wikipedia, the free encyclopedia
தி பிளிட்ஸ் (The Blitz) என்பது இரண்டாம் உலகப் போரில் நாசி ஜெர்மனியின் விமானப்படை பிரிட்டன் மீது நடத்திய தொடர் குண்டுவீச்சு கட்டத்தைக் குறிக்கிறது. செப்டம்பர் 6, 1940 முதல் மே 10, 1941 வரை நடந்த இந்த தொடர் குண்டுவீச்சில் 43,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். லண்டன் நகரம் மட்டும் தொடர்ச்சியாக 76 இரவுகள் குண்டுவீச்சுக்குள்ளானது.
தி பிளிட்ஸ் | |||||||
---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் உலகப் போரின், தாயக களத்தின் பகுதி | |||||||
ஜெர்மானிய குண்டுவீச்சால் வீடிழந்த மூன்று லண்டன் நகரக் குழந்தைகள் தங்கள் வீட்டின் இடிபாடுகளுக்குமுன் அமர்ந்துள்ளனர் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐக்கிய இராச்சியம் | நாசி ஜெர்மனி | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
வின்ஸ்டன் சர்ச்சில் ஹ்யூக் டவ்டிங் பிரடரிக் பைல் ஓவன் ட்யூடர் பாய்ட் லெஸ்லி கொஸ்ஸேஜ் | அடால்ஃப் ஹிட்லர் ஹெர்மன் கோரிங் ஹூகோ ஸ்பெர்லே ஆல்பர்ட் கெஸ்ஸல்ரிங் |
||||||
பலம் | |||||||
விமான எதிர்ப்பு தலைமையகம் பிரித்தானிய பலூன் தலைமையகம் | |||||||
இழப்புகள் | |||||||
~43,000 பொதுமக்கள் மாண்டனர், ~51,000 காயமடைந்தனர்[2] | 384 (அக்டோபர்– டிசம்பர் 1940 காலகட்டத்தில் மட்டும்)[3] |
பிரித்தானியச் சண்டையின் இறுதி கட்டத்தில் தொடங்கிய இந்த குண்டுவீச்சு பிரித்தானிய மக்கள் மற்றும் அரசின் மன உறுதியைக் குலைத்து அவர்களை அச்சுறுத்தி சரணடையச் செய்வதற்காக ஹிட்லரால் தொடங்கப்பட்டது. பிரிட்டனின் முக்கிய நகரங்களும் தொழிற்கூடங்களும் தொடர்ந்து தாக்கப்பட்டன. ஆனால் இந்த குண்டுவீச்சால் ஜெர்மானியர்கள் திட்டமிட்ட படையெடுப்புக்கு எந்த பயனும் ஏற்படவில்லை. பிரித்தானிய மக்களின் உறுதியும் குலையவில்லை. மே 1941ல் ஹிட்லரின் கவனம் கிழக்கே சோவியத் யூனியன் மீது திரும்பியதால் இந்த குண்டுவீச்சு நின்று போனது. அடுத்த சில ஆண்டுகளில் ஜெர்மானிய விமானப்படை பல முறை சிறிய அளவில் குண்டுவீசித் தாக்கியது. போரின் இறுதி மாதங்களில் வி-1 மற்றும் வி-2 வகை ஏவுகணைகளால் பிரிட்டன் தாக்கப்பட்டது.