பிரித்தானியச் சண்டை
From Wikipedia, the free encyclopedia
பிரித்தானியச் சண்டை (ஆங்கிலம்: Battle of Britain; ஜெர்மன்: Luftschlacht um England அல்லது Luftschlacht um Großbritannien) 1940ல் இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. நாசி ஜெர்மனியின் விமானப்படையான லுஃப்ட்வாஃபே பிரிட்டனின் விமானப்படையைத் தாக்கி அழிக்க மேற்கொண்ட முயற்சி “பிரித்தானியச் சண்டை” என்றழைக்கப்படுகிறது. இப்பெயர் பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பாராளுமன்றத்தில் ஆற்றிய ஒரு பேருரையிலிருந்து உருவானது. "பிரான்சுக்கான சண்டை முடிந்து விட்டது. அடுத்து பிரிட்டனுக்கான சண்டை ஆரம்பமாகும்” என்று அவர் பேசிய வார்த்தைகளே இச்சண்டையின் பெயர்காரணமாகின. ஜூலை-அக்டோபர், 1940 காலகட்டத்தில் பிரிட்டனின் வான்பிரதேசங்களில் நடைபெற்ற இச்சண்டை, முழுவதும் விமானப்படைகள் மட்டுமே மோதிய முதல் போராகக் கருதப்படுகிறது.
பிரித்தானியச் சண்டை | |||||||
---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் உலகப் போரின் பகுதி | |||||||
பிரிட்டனின் கண்காணிப்பாளர் கோரின் உறுப்பினர் ஒருவர் லண்டனின் வான்பிரதேசங்களைக் கண்காணிக்கிறார். |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஐக்கிய இராச்சியம்[22] கனடா[25] | நாசி ஜெர்மனி இத்தாலி |
||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ஹ்யூக் டவுடிங் கீத் பார்க் டிராஃபோர்ட் லீக்-மல்லோரி சி. ஜெ. குவின்டின் பிராண்ட் ரிச்சர்ட் சால் | ஹெர்மன் கோரிங் ஆல்பர்ட் கெஸ்ஸல்ரிங் ஹுகோ ஸ்பெர்லே ஹான்ஸ் ஜுயூர்கன்-ஸ்டஃம்ப் ரினோ கோர்சோ ஃபியூஜியர்[26] |
||||||
பலம் | |||||||
1,963 பறக்கக் கூடிய விமானங்கள். [28] | 2,550 பறக்கக் கூடிய விமானங்கள். [30] | ||||||
இழப்புகள் | |||||||
544 விமானப்படையினர் (மாண்டவர்)[5][32][33] 422 (காயமடைந்தவர்)[34] 1,547 விமானங்கள்[35] | 2,698 விமானப்படையினர் (மாண்டவர்)[36] 967 (கைப்பற்றப்பட்டவர்) 638 (காணாமல் போனவர்)[37] 1,887 விமானங்கள்[39] |
மேற்கு ஐரோப்பா முழுவதையும் கைப்பற்றிய பின் நாசி ஜெர்மனியின் படைகள் அடுத்து பிரித்தானியா தீவுகளைக் கைப்பற்றத் திட்டமிட்டன. ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரிட்டனின் கடற்கரைகளில் படைகளைத் தரையிறக்க பிரித்தானிய விமானப்படை பேரிடராக இருக்கும் என்பதால், தரைவழி படையெடுப்பு தொடங்கும் முன் அதை அழிக்க வேண்டும் என்பதற்காக ஹிட்லரும், லுஃப்ட்வாஃபே தலைமைத் தளபதி கோரிங்கும் வான்வழித் தாக்குதலைத் தொடங்கினர். ஆரம்பத்தில் இதன் இலக்கு பிரித்தானியா விமானப்படையின் அழிவாக மட்டும் இருந்தது. ஆனால் சண்டையின் இடையில் ஹிட்லர் பிரிட்டனின் நகரங்களின் மீது குண்டு வீசி அழிக்க உத்தரவிட்டார். இவ்வாறு மாறுபட்ட இலக்குகளை லுஃப்ட்வாஃபேவால் நிறைவேற்ற முடியாமல் ஜெர்மனியின் தாக்குதல் தோல்வியடைந்தது. லுஃப்ட்வாஃபே விமானங்களின் இழப்புகள் மிகவும் அதிகமானதால் ஜெர்மனி வான்வழித் தாக்குதலை நிறுத்திக்கொண்டது. பிரித்தானியா மீது படையெடுக்க வகுக்கப்படிருந்த சீ லயன் நடவடிக்கைத் திட்டமும் கைவிடப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி சந்தித்த முதல் தோல்வி இதுவே.