பர்பரோசா நடவடிக்கை
இரண்டாம் உலகப்போரில் சோவியத் ஒன்றியம் மீதான நாசி செருமானிய ஆக்கிரமிப்பு / From Wikipedia, the free encyclopedia
பர்பரோசா நடவடிக்கை (Operation Barbarossa, இடாய்ட்சு மொழியில்: Unternehmen Barbarossa) என்பது இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. இது நாசி செருமனி சோவியத் ஒன்றியத்தின் மீது நடத்திய படையெடுப்பின் ஆரம்பகட்ட நடவடிக்கைக்கு இடப்பட்டிருந்த குறிச்சொல். நடவடிக்கையின் துவக்கத்தில் ஜெர்மானியப் படைகள் சோவியத் படைகளை வேகமாக முறியடித்து முன்னேறினாலும், திட்டமிட்டபடி இலக்குகளை அவற்றால் அடையமுடியவில்லை. பர்பரோசா நடவடிக்கையின் தோல்வியால் கிழக்குப் போர்முனையில் மேலும் நான்கு ஆண்டுகள் கடும் போர் நீடித்தது. இருமுனைப் போர் புரியும் நிலைக்கு ஆளான ஜெர்மனி நான்காண்டுகளில் நேச நாட்டுப் படைகளால் தோற்கடிக்கப்பட்டது.
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
எழுத்துப் பிழைகளுள்ள பக்கம்.
தமிழில் தட்டச்சு செய்யப்படும் போதோ அல்லது சரியான எழுத்துக்கள் தெரியாமலோ இக்கட்டுரையில் எழுத்துப் பிழைகள் ஏற்பட்டிருக்கலாம். நீங்கள் இக்கட்டுரையில் உள்ள எழுத்துப் பிழைகளைக் களைந்து கட்டுரையை மேம்படுத்த உதவலாம். செம்மைப்படுத்திய பின் இச்செய்தியை நீக்கி விடுங்கள். |
பர்பரோசா நடவடிக்கை | |||||||
---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையின் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஜெர்மனி ருமேனியா பின்லாந்து இத்தாலி ஹங்கேரி சிலோவாக்கியா குரொவேசியா ஸ்பானிய தன்னார்வலர் | சோவியத் ஒன்றியம் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
அடொல்ஃப் இட்லர் பிரான்ஸ் ஹால்டர் விலெம் லீப் பெடோர் வொன் பொக் கேர்ட் வொன் ரண்ட்ஸ்டர்ட் இயன் அண்டொனெஸ்கு கார்ல் மனரெயிம் | ஜோசப் ஸ்டாலின் கியார்கி சூக்கொவ் அலெக்சாண்டர் வசிலியெவ்ஸ்கி செமியோன் பூதியோனி கிளிமெந்த் வரோசிலோவ் செமியோன் திமோசின்கோ மார்க்கியான் பப்போவ் பியோதர் குஸ்னெத்சோவ் திமீத்ரி பாவ்லொவ் † இவான் தியூலெனெவ் |
||||||
பலம் | |||||||
~3.9 மில்லியன், 3,600 தாங்கிகள், 4,389 வானூர்திகள்[1] 46,000 artillery pieces | ~3.2 மில்லியன் ஆரம்பத்தில் (பின்னர் 5 மில்லியன்) 12-15,000 தாங்கிகள், 35-40,000 வானூர்திகள் (11,357 தயார் நிலையில் 22 சூன் 1941 இல்)[2] |
||||||
இழப்புகள் | |||||||
கொல்லப்பட்டோர்: 250,000[3] காயமடைந்தோர்: 500,000 காணாமற்போனோர்: 25,000[3] 2,093 வானூர்திகள் அழிப்பு 2,758 தாங்கிகள் அழிப்பு | கொல்லப்பட்டோர்: 802,191[4] காயமடைந்தோர்: 3,000,000 பிடிக்கப்பட்டோர்: 3,300,000[5][6] 21,200 வானூர்திகள் அழிப்பு[7][8][9] 20,500 தாங்கிகள் அழிப்பு |
பர்பரோசா நடவடிக்கையின் இலக்கு சோவியத் ஒன்றியத்தின் ஐரோப்பிய பகுதிகளை வேகமாக வென்றெடுத்து, ஆர்க்கன்கெல்சுக்கு, ஆசுத்ராகான் (Arkhangelsk and Astrakhan) நகரங்களை இணைக்கும் கோடு வரை (இதனை A-A Line என்பர்), 1941 ஆம் ஆண்டு முடியும் முன்னர் கைப்பற்றுவது. ஆனால் 1941 டிசம்பர் முடிவில் செஞ்சேனை வேர்மாக்டின் (Wehrmacht) மிக வலுவான தாக்குதலை எதிர்த்துத் துரத்தியது. சூழ்ச்சிநுணுக்க நோக்கில் செருமானியர்கள் பெரும் படை வெற்றிகளைப் பெற்றனர், உக்ரைன் உட்பட பல சோவியத் ஒன்றியத்தின் முதன்மையான பொருளாதாரப் பகுதிகளைக் கைப்பற்றினர்[10]. இருப்பினும், உருசியர்கள் செருமனியர்களை மாசுக்கோவில் இருந்து வெளியேற்றினர்; இதன் பிறகு பின்னெப்பொழுதும் செருமனியரால் ஒரே நேரத்தில் அன்று தனிமுதன்மை பெற்றதாகக் கருதப்பட்ட சோவியத்-செருமன் எல்லை முகப்பில் வலிந்து படையெடுத்து முன்னேற முடியவில்லை.
பர்பரோசா நடவடிக்கையின் தோல்வி, இட்லரை இன்னும் பல படை முன்னெடுப்புகளையும், போர்களையும் சோவியத் ஒன்றியத்துக்குள் செய்யத் தூண்டியது; லெனின்கிராட் முற்றுகை[11][12], சுடாலின்கிராட் முற்றுகை, நார்ட்லிக்ட் நடவடிக்கை அடங்கிய இப்படிப்பட்ட போர்கள் கைப்பற்றப்பட்ட சோவியத் ஒன்றியத்துக்குள் இடம் பெற்றிருந்தாலும், அவை தோல்வியிலேயே முடிந்தன[13]>[14][15][16][17].
பார்பரோசா படைத்தள நடவடிக்கை, அது நடைபெற்ற நிலப்பரப்பு, பங்குகொண்ட மொத்த வீரர்கள், மாண்டவர் அல்லது படுகாயம் அடைந்தவர் எண்ணிக்கை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால் மனித வரலாற்றிலேயே மிகப்பெரிய போர்நடவடிக்கை எனக் கணிக்கப்படுகின்றது [18]. இத் தோல்வி நாட்சி செருமனியின் (நாட்சி இடாய்ட்சுலாந்தின்) அதுவரை இருந்த நல்வாய்ப்புகளின் திருப்பு முனையாகும். முக்கியமாக பர்பரோசா நடவடிக்கை கிழக்குக் களத்தைத் திறந்து, உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய போர்க்களமாகி, நட்பு நாடுகளின் வெற்றிக்கு அடிகோலியது. பர்பரோசா நடவடிக்கையும், அது நடைபெற்ற பகுதிகளும் மிகப் பெரிய போர்க் களங்களையும், மிகப் பெரிய அட்டூழியங்களையும், மிகப் பெரிய மனித இழப்புகளையும், ஏற்படுத்தி, செருமானியரையும், சோவியத்தினரையும் மிகக் கொடுமையான நிலைகளுக்குத் தள்ளி இரண்டாவது உலகப்போரின் விளைவையும் 20ம் நூற்றாண்டின் வரலாற்றையும் வெகுவாக மாற்றின.