சிக்மி டோர்சி தேசியப் பூங்கா (பூட்டான்)
From Wikipedia, the free encyclopedia
சிக்மி டோர்சி தேசியப் பூங்கா (Jigme Dorji National Park) ஆனது மறைந்த முன்னாள் அரசர் சிக்மி டோர்சி வாங்சுக் என்பாரின் பெயரில் பெயரிடப்பட்டுள்ளது. இது பூட்டானின் இரண்டாவது மிகப்பெரிய தேசிய பூங்கா ஆகும். இது கிட்டத்தட்ட மொத்த காசா மாவட்டத்தையும், திம்பு மாவட்டத்தின் வடக்குப் பகுதிகளையும், பாரோ புனாகா, மற்றும் வாங்டி போட்ராங் மாவட்டங்களையும் சுற்றுப்பகுதிகளாகக் கொண்டுள்ளது. இது 1974 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. நான்குபுறமும் 4316 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இதனால், 1400 முதல் 7000 மீட்டர் வரையிலான உயரத்தில் பூட்டானின் உள்ளடக்கியுள்ள மூன்று காலநிலை மண்டலங்களிலும் பரவியுள்ளது. 1,000 குடும்பங்களில் சுமார் 6,500 பேர் இந்த பூங்காவிற்குள்ளேயே வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவற்றின் மூலம் வாழ்வாதரம் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.
சிக்மி டோர்சி தேசிய பூங்கா | |
Protected Area | |
பெயர் மூலம்: சிக்மி டோர்சி வாங்சுக் | |
நாடு | பூட்டான் |
---|---|
மாவட்டம் | காசா, பாரோ, புனாகா, திம்பு, வாங்டி போடிராங் |
மிகவுயர் புள்ளி | |
- உயர்வு | 7,000 மீ (22,966 அடி) |
மிகத்தாழ் புள்ளி | |
- உயர்வு | 1,400 மீ (4,593 அடி) |
பரப்பு | 4,316 கிமீ² (1,666 ச.மைல்) |
விலங்கு | blue sheep, takin, பனிச்சிறுத்தை, musk deer, Himalayan black bear, வங்காளப் புலி, and சிவப்பு பாண்டா |
தேதி | 1974 |
| |
Website: Bhutan Trust Fund for Environmental Conservation | |
யுனெஸ்கோவினுடைய பூட்டானின் தற்காலிகப் பட்டியலில் இந்தப் பூங்காவானது தற்காலிகத் தலமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.[1][2]