இலா (இந்து சமயம்)
இந்து சமய தெய்வம் / From Wikipedia, the free encyclopedia
இல ( சமக்கிருதம்: इल ) அல்லது இலா ( சமக்கிருதம்: इला ) என்பது இந்து புராணங்களில் ஒரு ஆண்பெண்னகம் கொண்ட ஒரு தெய்வம், இது அவர்களின் பாலியல் மாற்றங்களுக்கு அறியப்படுகிறது ஒரு ஆணாக இருக்கும்பொழுது இவர் சுத்யும்னா எனவும் பெண்ணாக இருக்கும்பொழுது இலா என்றும் அறியப்படுகிறார் இலா இந்திய மன்னர்களில் சந்திர வம்சத்தின் முதன்மை முன்னோடியாகக் கருதப்படுகிறார் - இக்குலம் அய்லாஸ் ("இலாவின் சந்ததியினர்") என்றும் அழைக்கப்படுகிறது.
இல/இலா | |
---|---|
புதன் தனது மனைவியான இலாவுடன் | |
தேவநாகரி | इल/इला |
சமசுகிருதம் | Ila/Ilā |
வகை | தேவி |
இடம் | புதலோகம் |
மந்திரம் | ஓம் இலயாய நமக: |
துணை | புதன் (இந்து சமயம்) (பெண்ணாக இருக்கும்பொழுது) |
பெற்றோர்கள் | வைவஸ்வதமனு (தந்தை) , சிரத்தா(தாய்) |
குழந்தைகள் | புரூரவன் (மகன்) |
இலாவைப் பற்றி பல கதைகள் உள்ளன. இலா பொதுவாக வைவஸ்வத மனுவின் மகள் அல்லது மகன் என்று விவரிக்கப்படுகிறார், இதனால் சூரிய வம்சத்தின் நிறுவனர் இக்ஷ்வாகுவின் உடன்பிறப்பு ஆவார். பெண்ணாகப் பிறந்த இலா, அவள் பிறந்த உடனேயே தெய்வீக அருளால் ஆண் வடிவமாக மாறுகிறாள். பருவ வயதில் ஒரு புனித கானகத்தில் தவறாக நுழைந்த காரணத்தால், ஒவ்வொரு மாதமும் அவர் தனது பாலினத்தை மாற்றும்படி சபிக்கப்படுகிறார் அல்லது ஒரு பெண்ணாக மாற சபிக்கப்படுகிறாள். ஒரு பெண்ணாக இருக்கும்பொழுது சந்திரனின்(சோமா) மகனான புதனைத் திருமணம் செய்துகொள்கிறார். புதனுக்கு சந்திர வம்சத்தின் முதல்வனான புரூரவன் என்ற மகனைப் பெற்றுத் தருகிறார். பிறகு இலா மீண்டும் ஒரு ஆணாக மாற்றப்பட்டு மூன்று மகன்களுக்குத் தந்தையாகிறார்.
இலா வேதங்களில், இடா ( சமக்கிருதம்: इडा ) என்ற பேச்சின் தெய்வமாகவும், புருரவர்களின் தாய் என்றும் விவரிக்கப்படுகிறார்.
இலாவின் பாலின மாற்றங்களின் கதை புராணங்களிலும் இந்திய காவியக் கவிதைகளான ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் கூறப்பட்டுள்ளது .