புரூரவன்
From Wikipedia, the free encyclopedia
புரூரவன் (ஆங்கிலம்:Pururavas) (சமஸ்கிருதம்:पुरूरव) என்பவர் சந்திர குலத்தினை சேர்ந்தவராவார். இவரைப் பற்றி இந்து சமய இதிகாசமான மகாபாரதத்திலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் புதன் மற்றும் - இலா தம்பதியினரின் மகனாகவும்[1] , கேசி எனும் அரக்கனுடன் போரிட்டு ஊர்வசியை மீட்டவராகவும் அறியப்படுகிறார். ஊர்வசியுடன் இல்லறம் நடத்தி ஆயு என்ற மகனைப் பெற்றார். அதன் பின்பு ஊர்வசி மீண்டும் இந்திர லோகம் சென்றதால் துறவியாக வாழ்ந்து மறைந்தார்.