இரண்டாம் பூவர் போர்
From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் பூவர் போர் (Second Boer War, ஆபிரிகான் மொழியில் "இரண்டாம் விடுதலைப் போர்") அல்லது இரண்டாம் ஆங்கில-பூவர் போர் அல்லது தென்னாபிரிக்கப் போர்,[6] 11 அக்டோபர் 1899 முதல் 31 மே 1902 வரை பிரித்தானியப் பேரரசு ஒரு புறத்திலும், தென்னாப்பிரிக்கக் குடியரசும் (டிரான்சுவால் குடியரசு) ஆரஞ்சு விடுதலை இராச்சியமும் எதிரணியிலும் போரிட்ட சண்டைகளாகும். பிரித்தானியப் போர்முனையில் பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளிலிருந்தும் துருப்புகள் வரவழைக்கப்பட்டனர். தெற்கு ஆப்பிரிக்கா, ஆத்திரேலியக் குடியேற்றங்கள், கனடா, நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர், பிரித்தானிய இந்தியா, மற்றும் நியூசிலாந்தின் பகுதிகளிலிருந்து துருப்புகள் வந்தன. இந்தப் போரில் பிரித்தானியர் வெற்றி பெற்றனர்; இரு குடியரசுகளும் ஐக்கிய இராச்சியத்தில் இணைக்கப்பட்டன. இறுதியாக, இவ்விரு குடியரசுகளும் 1910இல் தென்னாப்பிரிக்க ஒன்றியத்தில் அங்கமாயின.
இரண்டாம் பூவர் போர் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
போயர் போர்கள் பகுதி | |||||||||
இசுபியோன் கொப்பில் பூர் படைவீரர்கள் |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
பிரித்தானியப் பேரரசு
| Orange Free State
|
||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
சாலிசுபரி பிரபு மில்னர் பிரபு இராபர்ட்சு பிரபு சேர் ரெட்வெர்சு புல்லர் கிட்ச்சுனர் பிரபு வில்பிரெடு லவுரியர் பிரெடிரிக் போர்டென்]] | பவுல் குருகர் லூயி போதா ஷால்க் பர்கர் கூசு டெ லா ரே மார்ட்டினசு இசுடெய்ன் கிறிஸ்டியன் டெ வெட் பியெட் குரோன்யெ (போர்க் கைதி) |
||||||||
பலம் | |||||||||
பிரித்தானிய வழமையாளர்கள்: 347,000 குடியேற்றப்பகுதிப் படைகள்: 103,000–153,000[2] | 88,000 (போரின் துவக்கத்தில் 25,000 டிரான்சுவால், 15,000 விடுதலை இராச்சிய பூர்கள்) (வெளிநாட்டுத் தன்னார்வலர்கள், கேப் பூர்கள்)[2] | ||||||||
இழப்புகள் | |||||||||
படைத்துறை இழப்புகள்: 21,144 மரணம் (7,894 சண்டையில் 13,250 நோயால்) 934 காணாமல் போனவர் 22,828 காயம்[3][4] | படைத்துறை இழப்புகள்: 9,098 மரணம் (4,000 சண்டையில்) (24,000 பூர் சிறைக்கைதிகள் கடல்கடந்து அனுப்பப்பட்டனர்)[2] குடித்துறை இழப்புகள்: 27,927 பூர் குடிகள் வதைமுகாம்களில் இறந்தனர். தவிர, அறியப்படாத கருப்பின ஆபிரிக்கர்களின் எண்ணிக்கை (107,000 பேர் கட்டுப்பாட்டில்).[5] |