இயேசு கோவில்
From Wikipedia, the free encyclopedia
இயேசு கோவில் (Church of the Gesù) என்பது உரோமை நகரில் அமைந்துள்ள கத்தோலிக்க வழிபாட்டிடங்களுள் முக்கியமான ஒன்றாகவும், இயேசு சபையின் மையக் கோவிலாகவும் விளங்குகிறது[1]. இக்கோவிலுக்கு "அர்ஜெந்தீனா பகுதியில் அமைந்த இயேசுவின் திருப்பெயர்க் கோவில்" (இத்தாலியம்:Chiesa del Santissimo Nome di Gesù all'Argentina) என்னும் நீண்ட பெயரும் உண்டு.
இயேசு கோவில் (Church of the Gesù) Chiesa del Santissimo Nome di Gesù all'Argentina | |
---|---|
இயேசு கோவில் முகப்புத் தோற்றம். பரோக்கு கலைப்பாணி முன்னோடி. கலைஞர்: ஜாக்கமோ தெல்லா போர்த்தா | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | உரோமை, இத்தாலியா |
புவியியல் ஆள்கூறுகள் | 41°53′45″N 12°28′47″E |
சமயம் | உரோமன் கத்தோலிக்கம் |
வழிபாட்டு முறை | இலத்தீன் |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | 1584 |
நிலை | கோவில் கட்டடப் பாணி |
தலைமை | தனியேலே லிபனோரி, சே.ச. |
இணையத் தளம் |
இக்கோவிலின் முகப்பு "பரோக்கு" கலைப் பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இப்பாணியில் பல கோவில்கள் உலகெங்கும் கட்டப்பட்டன. குறிப்பாக, இயேசு சபைத் துறவியர் தாம் கிறித்தவ மறையைப் பரப்பச் சென்ற நாடுகளில் இக்கலைப் பாணியில் கோவில்கள் கட்டியெழுப்பினர்.
இயேசு சபையின் நிறுவுநரான புனித லொயோலா இஞ்ஞாசியார் இக்கோவிலைக் கட்டுவதற்கான கருத்தை 1551ஆம் ஆண்டு முன்வைத்தார். புரடஸ்தாந்து சீர்திருத்தத்தின் போதும் அதைத் தொடர்ந்து கத்தோலிக்க திருச்சபையில் நிகழ்ந்த சீர்திருத்தத்தின் போதும் இக்கோவில் செயல்பாட்டு மையமாயிருந்தது. மேலும், இயேசு சபை 1773இல் முடக்கப்பட்ட ஆண்டு வரை இக்கோவில் இயேசு சபைத் தலைமையிடமாகவும் திகழ்ந்தது.