கத்தோலிக்க மறுமலர்ச்சி
From Wikipedia, the free encyclopedia
கத்தோலிக்க மறுமலர்ச்சி ( Counter-Reformation அல்லது Catholic Revival[1] ) என்பது திரெந்து பொதுச் சங்கம் (1545-1563) முதல் முப்பதாண்டுப் போர் (1648) முடிய உள்ள காலத்தில் கத்தோலிக்க திருச்சபை தன்னை மாற்றியமைக்க எடுத்த முயற்சியைக் குறிக்கும். புரடஸ்தாந்த சபைகள் கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக துவங்கிய கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இது இருந்தது.
இதன் முக்கிய நோக்கமாக இருந்தவை:
- திருச்சபையின் அதிகாரத்துவ படிநிலை மாற்றம்
- சமயத்துறவோர் வாழ்வியலில் மாற்றம்
- ஆண்மீக இயக்கங்கள்
- அரசியல் நோக்கு
இந்த மறுமலர்ச்சியின் காரணமாகவே சமயத்துறவோருக்கு சீரான ஆண்மீக்கல்வியும், இறையியல் கல்வியும், பொதுநிலையினர் கிறிஸ்துவோடு கொண்டுள்ள தனிப்பட்ட உறவு நிலை போன்றவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படலாயிற்று. கத்தோலிக்க வழிபாட்டு இசை மற்றும் கத்தோலிக்க கலைக்கு உள்ள முக்கியத்துவம் ஆகியன உறுதிசெய்யப்பட்டன. அறிவியல் புரட்சியினை கத்தோலிக்க திருச்சபை ஊக்குவிக்க இது காரணியாயிற்று.