ஆந்திரே பெசெத்
From Wikipedia, the free encyclopedia
ஆந்திரே பெசெத் (André Bessette, 9 ஆகத்து 1845 – 6 சனவரி 1937), என்பவர் திருச்சிலுவை சபையின் அருட்சகோதரராவார். பிரெஞ்சு-கனேடிய கத்தோலிக்கரிடையே இவர் மிகவும் புகழ் பெற்றவர். புனித யோசேப்புவின் மீது இவருக்கிருந்த பக்தியும், அவரின் பரிந்துரையால் பல புதுமைகளை இவர் செய்தார் என நம்பப்படுகின்றது.[1]
விரைவான உண்மைகள் புனித ஆந்திரே பெசெட், பிறப்பு ...
புனித ஆந்திரே பெசெட் | |
---|---|
பிறப்பு | (1845-08-09)ஆகத்து 9, 1845 மொன்ட்-சான்-கிரெகோர், கியூபெக், கனடா |
இறப்பு | சனவரி 6, 1937(1937-01-06) (அகவை 91) மொண்ட்ரியால், கனடா |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க திருச்சபை |
அருளாளர் பட்டம் | மே 23, 1982, புனித பேதுருவின் சதுக்கம், வத்திக்கான் நகர், by திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் |
புனிதர் பட்டம் | அக்டோபர் 17, 2010, புனித பேதுரு சதுக்கம் by திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் |
முக்கிய திருத்தலங்கள் | புனித யோசேப்பு பேராலயம் மொண்ட்ரியால், கியூபெக், கனடா |
திருவிழா | சனவரி 6 (ஐக்கிய அமெரிக்கா), சனவரி 7 (கனடா) |
மூடு
இவரை வணக்கத்திற்குரியவர் என 1978இலும் அருளாளர் என 1982இலும் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் எறிவித்தார்.[2] 17 அக்டோபர் 2010இல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் இவருக்கு புனிதர் பட்டமளித்தார்.[2][3]