திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
From Wikipedia, the free encyclopedia
திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர் (Pope Benedict XVI, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்; 16 ஏப்ரல் 1927 – 31 திசம்பர் 2022), உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 265வது திருத்தந்தையாக இருந்தவர். இவர் பவேரியா, ஜெர்மனியில் பிறந்தார். இவரது இயற்பெயர் ஜோசப் ராட்ஸிங்கர் என்பதாகும். 2005 ஏப்பிரல் திங்கள் 19 ஆம் நாள் தனது 78 அகவையில் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றார். தமக்கு முன்னிருந்தவர்களைப் போலவே திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டவுடன் பெயர்மாற்றம் செய்துகொண்டார். 2005 ஏப்பிரல் திங்கள் 24 ஆம் நாள் பாப்பரசராக தமது முதல் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். 2005 மே திங்கள் 7 ஆம் நாள் புனித யோவான் லாத்தரன் பேராலயத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் முன்னதாக மூனிச் உயர்மறைமாவட்டத்தின் கர்தினால்-பேராயராக செயற்பட்டுவந்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 264 திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரின் மறைவினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பினார் [1]. இவர் 28 பெப்ரவரி 2013இல் உரோம் நேரம் இரவு 8 மணிக்கு தனது திருத்தந்தை பதவியிலிருந்து விலகினார்.[2]
பதினாறாம் பெனடிக்ட் Benedict XVI | |
---|---|
265ஆம் திருத்தந்தை | |
ஆட்சி துவக்கம் | ஏப்ரல் 19, 2005 |
ஆட்சி முடிவு | பெப்ரவரி 28, 2013 (7 ஆண்டுகள், 315 நாட்கள்) |
முன்னிருந்தவர் | அருள் சின்னப்பர் II |
பின்வந்தவர் | பிரான்சிசு |
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | சூன் 29, 1951 மைக்கேல் வான் ஃபவுல்காபர்-ஆல் |
ஆயர்நிலை திருப்பொழிவு | மே 28, 1977 ஜோசப் ஸ்டேங்கிள்-ஆல் |
கர்தினாலாக உயர்த்தப்பட்டது | சூன் 27, 1977 |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | யோசப் அலோயிசு ராட்ஸிங்கர் |
பிறப்பு | (1927-04-16)16 ஏப்ரல் 1927 |
இறப்பு | 31 திசம்பர் 2022(2022-12-31) (அகவை 95) மாட்டர் எக்கிளேசிய மடம், வத்திக்கான் நகர் |
குடியுரிமை | இரட்டைக் குடியுரிமை: செருமன் மற்றும் வத்திக்கான் |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
பெற்றோர் | யோசப் ராட்ஸிங்கர், மரியா ராட்ஸிங்கர் |
கையொப்பம் | |
ஆசீர்வாதப்பர் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |