விக்ரமாதித்தியன்
From Wikipedia, the free encyclopedia
விக்கிரமாதித்தியன் (Vikramaditya, (சர்வதேச சமசுகிருத ரோமனாக்க அரிச்சுவடி: Vikramāditya) என்பவர் நூற்றுக்கணக்கான மரபுக்கதைகளில் பேசப்பட்ட ஒரு அரசராவார்.[1][2][3] பல கதைகள் இவரை உஜ்ஜயினி (பாடலிபுத்திரம் அல்லது பைத்தான் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசராக விவரிக்கின்றன. பல இந்து அரசர்கள் "விக்கிரமாதித்தியன்" என்ற பெயரைக் கொண்டுள்ளனர். குறிப்பாக குப்த அரசர் இரண்டாம் சந்திரகுப்தர் மற்றும் சாம்ராட் ஹேம் சந்திர விக்ரமாதித்யா ('ஹெமு'என பலராலும் அறியப்பட்டவர்). வெகுசனக் கலாச்சாரத்தின்படி இவர், சகர்களைத் தோற்கடித்து விக்ரம் நாட்காட்டி காலத்தை பொ.ஊ.மு. 57 இல் துவக்கினார். இவரை வரலாற்றுப் பாத்திரமாக நம்புவர்கள் அவரை பொ.ஊ.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதுகின்றனர்.
விரைவான உண்மைகள் விக்கிரமாதித்தியன் ...
விக்கிரமாதித்தியன் | |
---|---|
சக்கரவர்த்தி சாம்ராட் | |
உஜ்ஜைனிலுள்ள விக்கிரமாத்தித்தியனின் தற்கால உருவம். |
மூடு