வன்கலவி
பெண்கள் பாலியியல் / From Wikipedia, the free encyclopedia
வன்கலவி அல்லது பாலியல் வல்லுறவு அல்லது பாலியல் வன்கொடுமை (Rape) என்பது ஒருவர் இன்னொருவரை அவரது விருப்பத்துக்கு மாறாக கட்டாயப்படுத்தி பாலுறவிற்கு உட்படுத்தும் வன்முறையாகும். பாலியல் வன்முறைகளில் வன்கலவியே மிகவும் மோசமானதாகக் கருதப்படுகிறது. வன்கலவி தொடர்பான சட்டங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. சில எல்லாவகையான பாலியல் வன்முறையையும் வன்கலவி என வரையறுக்கின்றன. பெரும்பாலும் பெண்களே வன்கலவிக்கு உட்படுத்தப்படுபவர்களாக உள்ளனர். ஆண் - ஆண் வன்கலவியும் நடைபெறுவதுண்டு. பொதுவாக உலக அளவில் ஆண்களே பாலியியல் வல்லுறவில் அதிகமாக ஈடுபடுகிறார்கள்.[1]