மறுமலர்ச்சி (ஐரோப்பா)
From Wikipedia, the free encyclopedia
நவீன ஐரோப்பிய வரலாற்றின் தொடக்கத்தில் மறுமலர்ச்சி (Renaissance) என்பது அறிவியற் புரட்சியையும், கலைசார் மாற்றங்களையும் கொண்டுவந்த ஒரு பெரும் பண்பாட்டு இயக்கமாகும். இது மத்தியகாலத்தின் முடிவுக்கும், நவீன காலத்தின் தொடக்கத்துக்கும் இடையிலான மாறுநிலைக் காலத்தைக் குறித்து நிற்கின்றது. அறிவாற்றல் ரீதியாகப் புதியதொரு மீட்சி இலக்கியத்திலும் கலைத்துறையிலும் இக்காலகட்டத்தில் உருவெடுத்தது. இச்சமயத்தின்போது அறிவியல் கண்டுபிடிப்புகள் பல நிகழ்ந்தன. அரசியல் ரீதியாக நிலமானிய முறை ஒழிந்து தேசிய அரசுகள் தோன்றின. தனிமனித உணர்வும் சமூகப்பண்பும் தழைத்தோங்கின. அக்காலத்தில் தோன்றிய சமயச்சீர்திருத்த இயக்கமும் மறுமலர்ச்சியின் வெளிப்பாடே ஆகும். மறுமலர்ச்சிக் காலம் பொதுவாக, இத்தாலியில் 14 ஆம் நூற்றாண்டிலும், வட ஐரோப்பாவில் 16 ஆம் நூற்றாண்டிலும் தொடங்கியதாகக் கருதப்படுகின்றது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கலை இயக்கங்கள் |
---|