பாலக்காடு மாவட்டம்
கேரளத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
பாலக்காடு இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டமாகும். கேரளாவின் திருச்சூர், மலப்புரம் மாவட்டங்களும் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இது ஒரு கிராம மாவட்டமாகும். மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பாலக்காட்டுக் கணவாயே கேரளாவின் நுழைவாயிலாக உள்ளது. இம்மாவட்டத்தின் மொத்தப்பரப்பளவு 4480 ச.கி.மீ.கள் ஆகும். இது மாநிலத்தின் மொத்தப்பரப்பளவில் 11.5 சதவீதம் ஆகும். இங்கு மலையாளம் பரவாலாக பேசப்பட்டாலும் தமிழ் பேசுவோரும் மிகுதியாக உள்ளனர் பாலக்காடு மாவட்டத்தின் அதிகார பூர்வ மொழிகள் தமிழ் மற்றும் மலையாளம் ஆகும்
விரைவான உண்மைகள் பாலக்காடு, நாடு ...
பாலக்காடு | |
---|---|
கடிகார திசையில்: பாலக்காட்டுக் கோட்டை, ஒற்றப்பாலம் ஊர், ஆலத்தூர் ஊர் , மலம்புழா அணை நீர் கால்வாய், பட்டாம்பி ஊர், பாலக்காடு நகரம் | |
பாலக்காடு | |
நாடு | இந்தியா |
பகுதி | தென்னிந்தியா |
மாநிலம் | கேரளம் |
பகுதி | மத்திய கேரளா |
தலைமை இடம் | பாலக்காடு |
அரசு | |
• மாவட்ட ஆட்சியர் | திருமதி ம்ருண்மாய் ஜோஷி , இ.ஆ.ப |
• மாவட்ட காவல்துறை தலைவர் | ஸ்ரீ. ஆர்.விஸ்வநாத் , இ.கா.ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,482 km2 (1,731 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 28,09,934 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
இணையதளம் | palakkad |
மூடு