பாக்கித்தான் அரசியலமைப்பு
From Wikipedia, the free encyclopedia
பாக்கித்தான் இசுலாமியக் குடியரசின் அரசியலமைப்பு (Constitution of the Islamic Republic of Pakistan, உருது:آئین پاکستان), அல்லது 1973 அரசியலமைப்பு பாக்கித்தானின் மீயுயர் சட்டமாகும்.[1] சுல்பிக்கார் அலி பூட்டோவின் அரசினால் எதிர்க்கட்சிகளின் உதவியோடு வடிவமைக்கப்பட்ட இந்த அரசியலமைப்பு நாடாளுமன்றத்தால் ஏப்ரல் 10 அன்று ஏற்கப்பட்டு ஆகத்து 14, 1973 அன்று ஏற்புறுதி செய்யப்பட்டது.[2]
இந்தக் கட்டுரை உருது உரை கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு இடதிலிருந்து வலதாக சேர்க்கப்படாத எழுத்துக்களோ பிற குறியெழுத்துக்களோ உருது உரைக்குப் பதிலாக தெரியலாம். |
இந்த அரசியலமைப்பு பாக்கித்தானின் சட்டம், அரசியல் மற்றும் அமைப்பிற்கான வழிகாட்டுதலாக உள்ளது. பாக்கித்தானின் எல்லைகள், மக்கள் மற்றும் அவர்களின் அடிப்படை உரிமைகள், நாட்டின் அரசியலமைப்பு சட்டங்கள் மற்றும் ஆணைகள், அரசியல் கட்டமைப்பு, பல்வேறு அரசு அமைப்புகள், படைத்துறையின் கட்டமைப்பு போன்றவற்றை விவரிக்கின்றது.[3] முதல் மூன்று அத்தியாயங்கள் அரசின் மூன்று துறைகளிடையேயான விதிகள், உரிமைகள் மற்றும் தனி அதிகாரங்களை வரையறுக்கின்றது: ஈரவை சட்டவாக்க அவை; பிரதமரை முதன்மைச் செயல் அலுவலராகக் கொண்ட செயலாக்கப் பிரிவு; உச்ச நீதிமன்றத்தின் தலைமையிலமைந்த மீயுயர் கூட்டரசு நீதி முறைமை[3] அரசியலமைப்பு குடியரசுத் தலைவரை நாட்டின் ஒற்றுமையை நிலைநிறுத்தும் அலங்கார நாட்டுத் தலைவராக வரையறுக்கின்றது.[4] அரசியலமைப்பின் முதல் ஆறு விதிகள் அரசாட்சி முறைமையை விவரிக்கின்றன:கூட்டாட்சி நாடாளுமன்ற குடியரசாகவும் இசுலாமை தேசிய சமயமாகவும் குறிக்கின்றது.[5]
1973இல் ஏற்கப்பட்டாலும் 1956இல் முதல் அரசியலமைப்பு பிரகடனப்படுத்தப்பட்ட மார்ச் 23 ஒவ்வொரு ஆண்டும் குடியரசு நாளாக கொண்டாடப்படுகின்றது.[6]