பனிக்காலப் போர்
From Wikipedia, the free encyclopedia
பனிக்காலப் போர் (Winter War) என்பது சோவியத் ஒன்றியத்துக்கும், பின்லாந்துக்கும் இடையே நடைபெற்ற போரை குறிக்கும். இப்போர் நடந்த போது, வெப்பநிலை சராசரியாக −43 °செ (−45 °ப) அளவு இருந்தது. இரண்டாம் உலகப்போர் தொடங்கிய மூன்று மாத காலத்தில், 1939 நவம்பர் 30 அன்று சோவியத்து ஒன்றியம், பின்லாந்து மீது ஆக்கிரமிப்பு செய்ததால், இப்போர் தொடங்கிற்று. மூன்றரை மாதங்கள் கழித்து 1940 மார்ச்சு 13 அன்று மாசுக்கோ அமைதி உடன்பாடு ஏற்பட்டதனால், இப்போர் முடிவுக்கு வந்தது. உலக நாடுகள் சங்கம் இப்போர் முறையற்றது எனக் கருதியதால், சோவியத் ஒன்றியத்தை சங்கத்திலிருந்து விலக்கியது.
பனிக்கால போர் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் உலகப்போரின் பகுதி | |||||||||
பின்லாந்து வீரர்கள், சோவியத்து வீரரின், பிணத்தைப் பிடித்திக்கின்றனர் (1940) |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
பின்லாந்து
| சோவியத் ஒன்றியம் | ||||||||
பலம் | |||||||||
300,000–340,000 படை வீரர்கள்[F 1] 32 பீரங்கி வண்டிகள் [F 2] 114 வானூர்திகள்[F 3] | 425,000–760,000 படை வீரர்கள்[F 4] 2,514–6,541 பீரங்கி வண்டிகள்[F 5] 3,880 வானூர்திகள்[10] |
||||||||
இழப்புகள் | |||||||||
25,904 காணாமல் போனவர்கள் அல்லது இறந்தவர்கள் [11] 43,557 காயம்பட்டவர்கள்[12] 800–1,100 பிடிபட்ட வீர்ர்கள் [13] 20–30 பீரங்கி வண்டிகள் 62 வானூர்திகள்[14] 70,000 மொத்த இழப்புகள் | 126,875–167,976 காணாமல் போனவர்கள் அல்லது இறந்தவர்கள்[15][16][17] 188,671–207,538 காயம்பட்டவர்கள்[15][16] 5,572 பிடிபட்ட வீர்ர்கள் [18] 1,200–3,543 பீரங்கி வண்டிகள்[19][20][21] 261–515 வானூர்திகள் [21][22] 321,000–381,000 மொத்த இழப்புகள் |
சில பின்லாந்து பகுதிகளை சோவியத் ஒன்றியம் பெற்ற பிறகு சில சலுகைகளைகளுடன் பின்லாந்து குறிப்பிடத்தகுந்த எல்லைப்புற பகுதிகளை கேட்டது அந்த நிலத்துக்கு மாற்றாக வேறு இடத்தில் கொடுக்கப்படும் நிலத்தை ஒதுக்கப்படும் என்றது. பாதுகாப்பு காரணங்களுக்காக எல்லைப்புற நிலத்தை கேட்டது. குறிப்பாக பின்லாந்து எல்லையிலிருந்து 32 கிமீ தொலைவிலுள்ள சென் பீட்டர்சுபெர்க் பாதுகாப்புக்காக கேட்டது. நிலத்தை தர பின்லாந்து மறுத்த காரணத்தால் சோவியத் ஒன்றியம் பின்லாந்து மீது படையெடுத்தது. பின்லாந்து முழுவதையும் சோவியத் ஒன்றியம் தன் ஆளுகைக்கு கீழ் கொணடுவர திட்டமிட்டிருந்தது சில ஆதாரங்கள் மூலம் தெரியவந்த்து. பின்லாந்தை முழுவதும் வெற்றிகொண்ட பின் தன் கைப்பாவை அரசை அங்கு நிறுவ திட்டமிட்ருந்தது மோலோடோவ்- ரிப்பன்டிராப் உடன்பாடு சாட்சியாகும். மற்ற சில ஆதாரங்கள் சோவியத் ஒன்றியம் பின்லாந்து முழுவதையும் கைப்பற்ற நினைக்கவில்லை என்கின்றன.
சோவியத்தின் தாக்குதலை பின்லாந்து இரண்டு மாத காலத்துக்கு முறியடித்தது, பின்பு சோவியத் படை போர் உத்தியை மாற்றி தாக்குதலை தொடர்ந்தார்கள் புதிய உத்தியால் பின்லாந்து தற்காப்பை முறியடித்தார்கள். 1940 மார்ச்சில் படை நடவடிக்கை மாசுக்கோ அமைதி உடன்பாட்டின் மூலம் முடிவுக்கு வந்தது. பின்லாந்து 11% நிலங்களை விட்டுக்கொடுக்க இசைவு தெரிவித்தது. இப்பகுதியில் பின்லாந்தின் 30% பொருளாதாரம் இருந்தது. சோவியத்தின் இழப்புகள் அதிகமாக இருந்தன மேலும் அந்நாட்டின் மதிப்பு உலக நாடுகளிடம் சரிந்தது. போருக்கு முன் கோரிய நிலத்தை விட அதிகமாக பெற்றது. சோவியத் வட பின்லாந்திலுள்ள ஐரோப்பாவின் பெரிய நன்னீர் ஏரியான லடோகா ஏரியை பெற்றது. பின்லாந்து தன் இறையாண்மையை தக்கவைத்து கொண்டதுடன் உலக நாடுகள் மத்தியில் மதிப்பை பெற்றது.
சோவியத் படைகளின் மோசமான நடவடிக்கையால் அடால்ப் இட்லர் சோவியத்தை தாக்கி வெற்றி பெறலாம் என எண்ணி சோவியத் படைகள் வலுவற்றவை என்ற மேலைநாடுகளின் கருத்தை உறுதி செய்தார். 15 மாதங்கள் அமைதிக்கு பின் சூன் 1941 பின்லாந்து நாசி செர்மனி [[பார்போசா நடவடிக்கை]]யை சோவியத்துக்கு எதிராக தொடங்கியது பின்லாந்து அதனுடன் சேர்ந்து சோவியத் மீது தாக்குதலை தொடுத்தது இது பனிப்போரின் தொடர்ச்சியான போர் என அழைக்கப்பட்டது..