பத்ம விபூசண்
From Wikipedia, the free encyclopedia
பத்ம விபூசண் (Padma Vibhushan) என்பது 'தனிச்சிறப்பு வாய்ந்த, சிறந்த பணிகளுக்காக' இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் இரண்டாவது உயரிய குடியியல் விருது ஆகும். பதக்கம் ஒன்றும் பாராட்டிதழ் ஒன்றும் கொடுக்கப்படுகிறது. இது முதன் முதல் ஜனவரி 2, 1954-ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது. 2021 வரை, 321 நபர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.[1]
விரைவான உண்மைகள் விருது குறித்தத் தகவல் ...
பத்ம விபூசண் | ||
விருது குறித்தத் தகவல் | ||
---|---|---|
வகை | குடிமக்களுக்கான | |
பகுப்பு | தேசிய அளவில் | |
நிறுவியது | 1954 | |
கடைசியாக வழங்கப்பட்டது | 2021 | |
மொத்தம் வழங்கப்பட்டவை | 321 | |
வழங்கப்பட்டது | இந்திய அரசு | |
முந்தைய பெயர்(கள்) | பஹேலா வர்க் | |
நாடா | நடுத்தர பிங்க் | |
விருது தரவரிசை | ||
பாரத ரத்னா ← பத்ம விபூசண் → பத்ம பூசண் |
மூடு