பண்பாட்டு மரபுவளம்
From Wikipedia, the free encyclopedia
பண்பாட்டு மரபுவளம் அல்லது கலாச்சார பாரம்பரியம் என்பது கடந்த தலைமுறையினரிடமிருந்து பெறப்பட்ட ஓர் சமூகத்தின் பாரம்பரிய மரபுரிமைகளாகும். கடந்த தலைமுறைகளின் அனைத்து பழக்கங்களும் "மரபு" என்று அறியப்படுவதில்லை, மாறாக, பாரம்பரியம் என்பது சமூகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவையை குறிக்கிறது.[1]
பண்பாட்டுச் சொத்துகள் என்பது இயல் வளங்கள் (கட்டிடங்கள், நினைவுச்சின்னங்கள், நிலப்பரப்புகள், காப்பகப் பொருட்கள், புத்தகங்கள், கலைப் படைப்புகள் மற்றும் கலைப்பொருட்கள் போன்றவை), புலப்படா வளங்கள் மற்றும் பண்புகள் (நாட்டுப்புறவியல், மரபுகள், மொழி மற்றும் அறிவு போன்றவை) மற்றும் இயற்கை வளங்கள் (கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்புகள் மற்றும் பல்லுயிர்) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.[2] பூர்வீக அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பது தொடர்பாக இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.[3]
கலாச்சார சொத்துக்களின் சட்டப் பாதுகாப்பு பல சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் தேசிய சட்டங்களை உள்ளடக்கியது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் யுனெஸ்கோ கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் ஒப்பந்தம் செய்கின்றன. ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் ஒருங்கிணைப்புக்கும் இது பொருந்தும்.[4][5][6][7][8][9]