நீனவா மாகாணம்
ஈராக்கின் மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
நீனவா கவர்னரேட் அல்லது நீனவா மாகாணம் ( அரபு மொழி: محافظة نينوى ) ( Syriac ) என்பது வடக்கு ஈராக்கில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இதில் பண்டைய அசீரிய நகரமான நினிவேவைக் கொண்டுள்ளது. இது கிமு 25 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 7 ஆம் நூற்றாண்டு வரை அசிரியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது. இதன் பரப்பளவு 37,323 km2 (14,410 sq mi) மற்றும் மக்கள் தொகையானது 2003 இல் 2,453,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் பிரதான நகரம் மற்றும் மாகாண தலைநகரமாக மோசுல் நகரம் உள்ளது. இது பண்டைய நினிவேயின் இடிபாடுகளுக்கு வெளியே டைக்ரிஸ் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகராக தால் அஃபர் உள்ளது. 1976 க்கு முன்னர், இது மொசூல் மாகாணம் என்று அழைக்கப்பட்டது மற்றும் இன்றைய தன்னாட்சி ஈராக் குர்திஸ்தானின் ஒரு பகுதியாக இருக்கும் இன்றைய டோஹுக் மாகாணத்தையும் உள்ளடக்கியதாக இருந்தது. [ மேற்கோள் தேவை ]
இனம், சமயம் மற்றும் கலாச்சார ரீதியாக வேறுபட்ட பிராந்தியமான இது இஸ்லாமிய அரசு ஈராக் மற்றும் லெவண்ட் என அழைக்கப்படும் பயங்கரவாத அமைப்பின் தாக்குதல்களுக்கு உட்பட்டது. 10 ஜூன் 2014 அன்று மொசூல் கைப்பற்றப்பட்டது, மேலும் அங்கு இருந்த பல வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வரலாற்று இடிபாடுகள் மற்றும் நினைவுச்சின்னங்கள் அவர்களால் அழிக்கப்பட்டன .[1] ஆபரேஷன் "வி ஆர் கம்மிங், நினிவே" (يا يا ad; காதிமுன் யா நெய்னாவா) என பெயரிடப்பட்ட நகரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்கான ஒரு பெரிய தாக்குதல் அக்டோபர் 2016 இல் தொடங்கியது.[2][3]