துராணிப் பேரரசு
From Wikipedia, the free encyclopedia
துராணிப் பேரரசு (Durrani Empire) (பஷ்தூ: د درانیانو واکمني), ஆப்கானின் இறுதி பேரரசு என்பர்.[4] இப்பேரரசை 1747இல் காந்தாரத்தை தலைநகராகக் கொண்டு ஆப்கானிஸ்தானில் நிறுவியவர் அகமது ஷா துரானி ஆவார். [5][6]
துராணிப் பேரரசு د درانیانو ټولواکمني | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1747–1826 | |||||||||||||||||||
தலைநகரம் | கந்தகார் (1747–1776) காபூல் (1776–1823, 1839–1842) பெஷாவர் (1776–1818; (குளிர்கால தலைநகர்)[1][2] ஹெறாத் நகரம் (1818–1826)[3] | ||||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | பஷ்தூ மொழி & பாரசீக மொழி | ||||||||||||||||||
சமயம் | இசுலாம் | ||||||||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||||||||
ஷா | |||||||||||||||||||
• 1747–1772 | அகமது ஷா துராணி(first) | ||||||||||||||||||
• 1839–1842 | சூஜா ஷா துராணி(last) | ||||||||||||||||||
வரலாற்று சகாப்தம் | நவீன காலத்திற்குச் சற்று முந்திய காலம் | ||||||||||||||||||
• தொடக்கம் | 1747 | ||||||||||||||||||
• முடிவு | 1826 | ||||||||||||||||||
| |||||||||||||||||||
தற்போதைய பகுதிகள் | ஆப்கானித்தான் இந்தியா ஈரான் பாக்கித்தான் தஜிகிஸ்தான் துருக்மெனிஸ்தான் உஸ்பெகிஸ்தான் |
துராணிப் பேரரசு, தற்கால ஆப்கானிஸ்தான், வடகிழக்கு இரான், கிழக்கு துருக்மேனிஸ்தான், பாகிஸ்தானின் பெரும் பகுதிகள் மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட வடமேற்கு இந்தியப் பகுதிகளை, கி. பி 1747 முதல் கி. பி 1826 முடிய ஆட்சி செய்தது.
துராணிப் பேரரசின் பஷ்தூன் படைவீரர்கள் 1 மே 1746 மற்றும் 5 பிப்ரவரி 1762 அன்று ஆயிரக்கணக்கான பஞ்சாப் சீக்கியர்களை படுகொலை செய்தனர்.[7][8][9]தான் சார்ந்த பஷ்தூன் இன மக்களுடன், மேலும் பல்வேறு மலைவாழ் பழங்குடி மக்களின் ஆதரவைப் பெற்ற துராணி, பலூச் மக்களுடன் கூட்டு சேர்ந்து, ஆப்கான் நிலப்பரப்பை மேற்கில் கொரசான் முதல் கிழக்கில் காஷ்மீர் மற்றும் தில்லி வரையிலும், வடக்கில் அமு தாரியா முதல் தெற்கில் அரபியன் கடல் வரையும் ஆப்கான் நாட்டை விரிவு படுத்தினார். [10][11]
ஆப்கானின் படைகள் கஜினி மற்றும் காபூல் நகரங்களை உள்ளூர் ஆட்சியாளர்களிடமிருந்து கைப்பற்றியது.
1749இல் மொகலாயர் தற்கால பாகிஸ்தானையும், வடமேற்கு இந்தியாவின் ஆப்கானியர்களிடமிருந்து பறித்தது. அகமது ஷா மேற்கு பகுதியில் உள்ள ஹெராத் நகரத்தை கைப்பற்றினான். அகமது ஷாவின் படைகள் இந்தியாவை நான்கு முறை தாக்கி காஷ்மீர் மற்றும் பஞ்சாப் பகுதிகளை கைப்பற்றினர். 1757ஆம் ஆண்டின் முற்பகுதியில், தில்லி மாநகரை தாக்கி, பஞ்சாப், காஷ்மீர் மற்றும் சிந்து பகுதிகளை கைப்பற்றி, மொகலாயப் பேரரசு பெயரளவில் இயங்க அனுமதிக்கப்பட்டது. [12]
1772இல் அகமது ஷா துராணி இறந்த பின், அவரது மகன் தைமூர் ஷா காபூலை அரசியல் தலைநகராகவும், சியால்கோட் நகரை குளிர்கால தலைநகராகவும் கொண்டார்.
துராணிப் பேரரசு, நிலையான நவீன ஆப்கானிஸ்தான் தேசிய அரசு அமைய அடித்தளமிட்டது.[13] எனவே அகமது ஷா அப்தாலியை ஆப்கானிஸ்தானின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.