ஜொகூர் நீரிணை
சிங்கப்பூர்; தீபகற்ப மலேசியா இரு நிலப் பகுதிகளைப் பிரிக்கும் ஓர் அனைத்துலக நீரிணை / From Wikipedia, the free encyclopedia
ஜொகூர் நீரிணை (ஆங்கிலம்: Johore Strait அல்லது Tebrau Strait அல்லது Straits of Johor; மலாய் மொழி: Selat Johor; சீனம்: 柔佛海峡) என்பது சிங்கப்பூர்; தீபகற்ப மலேசியா எனும் இரு நிலப் பகுதிகளைப் பிரிக்கும் ஓர் அனைத்துலக நீரிணை ஆகும்.[1]
விரைவான உண்மைகள் ஜொகூர் நீரிணை, ஆள்கூறுகள் ...
ஜொகூர் நீரிணை | |
---|---|
Straits of Johor | |
சிங்கப்பூர் மலேசியாவுக்கு இடையே ஜொகூர் நீரிணை | |
ஆள்கூறுகள் | 1°26′48″N 103°45′13″E |
வகை | நீரிணை |
வடிநில நாடுகள் | சிங்கப்பூர் மலேசியா |
அதிகபட்ச நீளம் | 50 கி.மீ. |
அதிகபட்ச அகலம் | 5 கி.மீ. |
குறைந்தபட்ச அகலம் | 1 கி.மீ. |
மூடு
இந்த நீரிணையானது தெற்கில் சிங்கப்பூர் நாட்டையும் அதன் தீவுகளையும்; வடக்கே மலாய் தீபகற்பத்தின் பிரதான நிலப்பரப்பில் உள்ள மலேசிய மாநிலமான சொகூர் மாநிலத்தையும் பிரிக்கிறது.
அதே வேளையில், மேற்கில் மலாக்கா நீரிணையையும் தென்கிழக்கில் சிங்கப்பூர் நீரிணையையும் இணைக்கிறது. ஜொகூர் ஆற்றின் முகத்துவாரம்; மற்றும் ஆற்றுப் படுகைகள்; ஜொகூர் நீரிணையின் வடகிழக்கில் உள்ளன.