செபாஷ் செரீப்
2022 முதல் பாகிஸ்தானின் 23வது பிரதமர் / From Wikipedia, the free encyclopedia
மியான் முகம்மது செபாஸ் செரீப் (Mian Muhammad Shahbaz Sharif) (பஞ்சாபி மற்றும் உருது: میاں محمد شہباز شریف , pronounced [miˈãːmʊˈɦəmːəd̪ ʃɛhˈbaːz ʃəˈriːf] ; பிறப்பு 23 செப்டம்பர் 1951) ஒரு பாக்கித்தானிய அரசியல்வாதியும் மற்றும் பாக்கித்தானின் பிரதம மந்திரியும் ஆவார். அவர் பாக்கித்தான் முஸ்லிம் லீக் (என்) இன் தற்போதைய தலைவர் ஆவார். முன்னதாக, அவர் தனது அரசியல் வாழ்க்கையில் மூன்று முறை பஞ்சாப் முதல்வராக பணியாற்றினார், பஞ்சாபின் முதல்வராக நீண்ட காலம் பதவி வகித்தவர்.
செபாஷ் செரீப் | |
---|---|
23 ஆம் பாக்கித்தான் பிரதமர் | |
பதவியில் 11 ஏப்ரல் 2022 – 13 ஆகத்து 2023 | |
குடியரசுத் தலைவர் | ஆரிப் ஆல்வி |
முன்னையவர் | இம்ரான் கான் |
பாக்கித்தான் எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் 20 ஆகத்து 2018 – 10 ஏப்ரல் 2022 | |
குடியரசுத் தலைவர் | மம்நூன் ஹுசைன் ஆரிப் ஆல்வி |
முன்னையவர் | சையது குர்சித் அகமது ஷா |
பாக்கித்தான் தேசிய சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 13 ஆகத்து 2018 | |
தொகுதி | தேசிய சட்டமன்றத் தொகுதி-132 (லாகூர்-X) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 23 செப்டம்பர் 1951 (1951-09-23) (அகவை 72) லாகூர், பாக்கித்தான் |
அரசியல் கட்சி | பாக்கித்தான் முஸ்லீம் லீக் (என்) |
துணைவர்(கள்) | பேகம் நுஸ்ரத் (தி. 1973) |
பிள்ளைகள் | 4, அம்சா சாபாஷ் செரீப் உட்பட |
செபாஸ் 1988 ஆம் ஆண்டில் பஞ்சாப் மாகாண சட்டமன்றத்திற்கும், 1990 ஆம் ஆண்டில் பாக்கித்தானின் தேசிய சட்டமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார் . அவர் மீண்டும் 1993 ஆம் ஆண்டில் பஞ்சாப் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதோடு எதிர்க்கட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டார் . அவர் முதல் முறையாக 1997 ஆம் ஆண்டில் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பஞ்சாப் முதல்வராக 20 பிப்ரவரி 1997 அன்று பதவியேற்றார். 1999 பாக்கித்தானிய ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, செபாஸ் குடும்பத்துடன் சவுதி அரேபியாவில் பல ஆண்டுகளாக சுயமாக நாடு கடத்தப்பட்டார். 2007ஆம் ஆண்டில் பாக்கித்தானுக்குத் திரும்பினார். 2008 ஆம் ஆண்டு பாக்கித்தான் பொதுத் தேர்தலில் பஞ்சாப் மாகாணத்தில் பாக்கித்தான் முஸ்லிம் லீக் (என்) வெற்றி பெற்ற பிறகு, செபாஸ் இரண்டாவது முறையாக முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் 2013 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக பஞ்சாபின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018 பாக்கித்தான் பொதுத் தேர்தலில் அவரது கட்சி தோல்வியடையும் வரை அவரது பதவிக் காலத்தை வகித்தார். அவரது சகோதரர் நவாஸ் ஷெரீப் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து அவர் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-என் தலைவராக நியமிக்கப்பட்டார். 2018 தேர்தலுக்குப் பிறகு அவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். [1]
டிசம்பர் 2019 இல், தேசிய பொறுப்புக்கூறல் பணியகம் (NAB) பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டி, செபாஸ் மற்றும் அவரது மகன் ஹம்சா ஷெரீப் ஆகியோருக்கு சொந்தமான 23 சொத்துக்களை முடக்கியது. 28 செப்டம்பர் 2020 அன்று, தேசிய பொறுப்புக்கூறல் பணியகம் லாகூர் உயர் நீதிமன்றத்தில் செபாஸை கைது செய்து பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் குற்றம் சாட்டினார். விசாரணை நிலுவையில் இருந்த நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். [2] [3] 14 ஏப்ரல் 2021 அன்று, லாகூர் உயர்நீதிமன்றம் பணமோசடி வழக்கில் அவரை பிணையில் விடுவித்தது. [4] 2020-2022 பாகிஸ்தான் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்குப் பிறகு 11 ஏப்ரல் 2022 அன்று பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.