சாகர்மாதா தேசியப் பூங்கா
நேபாள தேசிய பூங்கா / From Wikipedia, the free encyclopedia
சாகர்மாதா தேசியப் பூங்கா (Sagarmāthā National Park) (sagaramāthā rāṣṭriya nikuñja), நேபாள நாட்டின் தலைநகரம் காட்மாண்டிலிருந்து கிழக்கே இமயமலையின் எவரஸ்டு கொடுமுடியின் அடிவாரத்தில் அமைந்த பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். சாகர்மாதா தேசியப் பூங்கா உலகின் முக்கிய பறவைகளின் சரணாலயங்களின் ஒன்றாக உள்ளது.[1] நேபாளத்தின் சொலு கூம்பு மாவட்டத்தில் அமைந்துள்ள[2] இப்பூங்கா, கடல் மட்டத்திலிருந்து 7000 மீட்டர் உயரத்தில், 124,400 ஹெக்டேர் நிலப் பரப்பு கொண்டது.[3] யுனேஸ்கோவால் இயற்கையாக அமைந்த உலகப் பாரம்பரியக்களமாக ஏற்றுக் கொண்டுள்ளது.[4] சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இங்கு சான்போசி எனும் பெயருடைய சிறு விமான நிலையம் உள்ளது. பூங்காவின் பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கம் நடைமுறைப்படுத்த நேபாள இராணுவத்தின் ஒரு படைப் பிரிவு இப்பூங்காப் பகுதியில் உள்ளது.
விரைவான உண்மைகள் சாகர்மாதா தேசியப் பூங்கா, அமைவிடம் ...
சாகர்மாதா தேசியப் பூங்கா | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
சாகர்மாதா தேசியப் பூங்கா | |
அமைவிடம் | நேபாளம் |
பரப்பளவு | 1148 சதுர கிலோ மீட்டர் |
நிறுவப்பட்டது | சூலை 19, 1976 |
வகை | இயற்கை |
வரன்முறை | vii |
தெரியப்பட்டது | 1979 (உலக பாரம்பரியக் குழுவின் 3வது அமர்வு) |
உசாவு எண் | 120 |
State Party | நேபாளம் |
Region | உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும் |
மூடு