காவ்ரீலோ பிரின்சிப்
From Wikipedia, the free encyclopedia
காவ்ரீலோ பிரின்சிப் (Gavrilo Princip) (செர்பிய மொழி: Гаврило Принцип; (1894-07-25)25 சூலை 1894 [1] – (1918-04-28)28 ஏப்ரல் 1918) ஓர் போசுனிய செர்பியர். இளம் போசுனியா எனப் பொருள்படும் இம்லாடா போசுனியா என்ற யூகோசுலாவிய தேசிய இயக்கத்தில் உறுப்பினர்.[2] சாரயேவோவில் 28 சூன், 1914ஆம் ஆண்டு ஆத்திரிய நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாண்டும், அவருடைய மனைவி சோபியும் காரில் சென்ற போது தமது கூட்டாளி சுடத்தவறுகையில் பிரின்சிப் சுட்டுக் கொன்றார்.[3] பிரின்சிப்பும் அவன் கூட்டாளியும் கைது செய்யப்பட்டபோது இச்சதியில் பல செர்பிய இராணுவ அதிகாரிகளின் தொடர்பு வெளிப்பட்டு ஆஸ்திரிய-அங்கேரி இராச்சியம் சூலை இறுதி எச்சரிக்கை எனப்படும் எதிர்ப்பை வெளியிட்டது.[4] இதனைத் தொடர்ந்தே முதல் உலகப் போருக்கான நிகழ்வுகள் ஏற்படலாயின.[5]
காவ்ரீலோ பிரின்சிப் | |
---|---|
டெரெசின் சிறையில் காவ்ரீலோ பிரின்சிப் | |
பிறப்பு | (1894-07-25)25 சூலை 1894 ஓப்லயாய், போசுனியா எர்சகோவினா (1878-1918), ஆஸ்திரியா-அங்கேரி |
இறப்பு | 28 ஏப்ரல் 1918(1918-04-28) (அகவை 23) டெரெசின், பொஃகீமியா, ஆஸ்திரியா-அங்கேரி |
தேசியம் | யூகோசுலாவியர் |
இனம் | செர்பியர் |
குற்ற விசாரணையின்போது பிரின்செப் "நான் யூகோசுலாவிய தேசியவாதி, யூகோசுலாவியர்களை ஒருங்கிணைத்தலே என் நோக்கம்; எந்தவிதமான அரசாக அமைந்தாலும் எனக்குக் கவலையில்லை, ஆனால் ஆத்திரியாவிலிருந்து விடுதலை பெற வேண்டும்" என்று முழக்கமிட்டார்.[6]