எள்
மருத்துவ குணங்கள் நிறைந்த 'எள்' என்ற எண்ணெய் வித்து. / From Wikipedia, the free encyclopedia
எள் (Sesamum Indicum)[1] ஒரு மருத்துவ மூலிகை. எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகள் உள்ளன. இது இந்தியா முழுதும் பயிரிடப்படும் சிறிய செடி வகையாகும். இதற்குத் திலம் என்றும் ஒரு பெயர் உண்டு (இதில் இருந்து எண்ணெய்க்குத் தைலம் என்று பெயர்). எள் விதைகளில் இருந்து பிழிந்து எள்நெய் பெறப்படுகிறது. எள்நெய் என்பதே எண்ணெய் எனப்படுவது, ஆனால் பொதுவாக இதை நல்லெண்ணெய் என்று அழைப்பர். எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. எள் வறண்ட பகுதியிலும் வளரக் கூடியது. இதைப் பயிரிடும்போது ஒருமுறை தண்ணீர் விட்டால் போதும். பிறகு தண்ணீர் விடத் தேவையில்லை. அந்த அளவுக்கு வறட்சியைச் தாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது.
விரைவான உண்மைகள் எள், உயிரியல் வகைப்பாடு ...
எள் | |
---|---|
எள் செடி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் (நிலைத்திணை) |
பிரிவு: | |
வகுப்பு: | Magnoliopsida |
வரிசை: | Lamiales |
குடும்பம்: | Pedaliaceae |
பேரினம்: | எள் (Sesamum) |
இனம்: | S. indicum |
இருசொற் பெயரீடு | |
Sesamum indicum ( கரோலசு லின்னேயசு | |
மூடு