எர்சில் மலை
From Wikipedia, the free encyclopedia
எர்சில் மலை (Mount Herzl, எபிரேயம்: הר הרצל), மேலும் Har HaZikaron (எபிரேயம்: הר הזכרון நேரடி மொழிபெயர்ப்பு: "நினைவு கூரல் மலை") இசுரேலின் தேசியக் இடுகாட்டையும் மற்ற நினைவக, கல்வி அமைப்புக்களையும் உள்ளடக்கி எருசலத்தின் மேற்குப் பகுதியில் எருசலக் காடுகளை அடுத்து அமைந்துள்ள பகுதியாகும். தற்கால அரசியல் சீயோனிச நிறுவனரான தியோடர் எர்சில் நினைவாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. குன்றின் சிகரத்தில் எர்சிலின் கல்லறை உள்ளது. பெரும் இன அழிப்பின் நினைவுச் சின்னமான யாட் வசெம், எர்சில் மலைக்கு மேற்கே உள்ளது. போரில் இறந்த இசுரேலிய வீரர்கள் இங்கு அடக்கம் செய்யப்படுகின்றனர்[1][2].
எர்சில் மலை | |
---|---|
הַר הרצל Har Herzl | |
எர்சில் மலைக்கான முதன்மை வாயில் | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 834 m (2,736 அடி) |
புவியியல் | |
அமைவிடம் | 1 எர்சில் புலெவா, எருசலேம் |
மூலத் தொடர் | யுடீய மலைகள் |
1948 ல் இஸ்ரேல் தோற்றுவிக்கப்பட்ட பின்னர், அது மவுண்ட் ஹெர்செலுடன் வடக்கு பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் வீரர்கள் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. பின்னர், 1951 ஆம் ஆண்டில் தெற்கு மவுண்ட் ஹெர்செலுடன் கூட நாட்டின் தலைமை புதைக்காமல் ஒரு தேசிய கல்லறையில் Isral இடத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஒரு சில ஆண்டுகளுக்கு பின்னர் இது தேசிய இராணுவ கல்லறையில், போலீஸ் மற்றும் பிற பாதுகாப்பு படைகள் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.[சான்று தேவை]
எர்சில் குன்று கடல் மட்டத்திலிருந்து 834 மீட்டர்கள் உயரத்தில் உள்ளது. இங்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்த விரிந்த முன்றில்கள் உள்ளன. போரில் இறந்தோருக்கான அஞ்சலிக் கூட்டங்கள் தேசிய படைத்துறை மற்றும் காவலர் இடுகாட்டில் நடக்கிறது.