எரிமலை வெடிப்பு
From Wikipedia, the free encyclopedia
எரிமலை வெடிப்பு அல்லது எரிமலைச்சீற்றம் என்பது பேரழிவை ஏற்படுத்தும் ஒரு வகை இயற்கைச் செயல்பாடாகும்.இந்த நிகழ்வில் பூமிக்கு அடியிலிருந்து பாறைத்துகள்களும்,அதீத வெப்பமுடைய நீரும்,கூழ்ம நிலையிலுள்ள பாறைகளும் அதிக அழுத்தத்துடனும்,அதீத விசையுடனும் பூமிக்கு மேற்பரப்பில் தூக்கி வீசப்படுகிறது.இவற்றுடன் தீப்பிழம்பும்,கரியமில வாயுவும்,கரும்புகையும் சேர்ந்து பேரழிவை ஏற்படுத்துகிறது.[1][2][3]