உருசியாவின் முதலாம் பவுல்
உருசியப் பேரரசர் / From Wikipedia, the free encyclopedia
முதலாம் பவுல் (Paul I, உருசியம்: Па́вел I Петро́вич; பாவெல் பெத்ரோவிச்; 1 அக்டோபர் [யூ.நா. 20 செப்டம்பர்] 1754 – 23 மார்ச் [யூ.நா. 11 மார்ச்] 1801) உருசியப் பேரரசராக 1796 முதல் 1801 வரை ஆட்சியில் இருந்தவர். பேரரசர் மூன்றாம் பீட்டர், உருசியாவின் இரண்டாம் கத்தரீன் ஆகியோரின் ஒரே மகனாக அதிகாரபூர்வமாக அறியப்படும் முதலாம் பவுல், தனது காதலர் செர்கே சால்த்திகோவ் மூலம் பிறந்ததாக கேத்தரின் கூறுவார்.[1]
முதலாம் பவுல் Paul I | |||||
---|---|---|---|---|---|
முதலாம் பவுலின் உருவ ஓவியம் (1800 இல் விளாதிமிர் பரவிக்கோவ்சுக்கி வரைந்தது) | |||||
உருசியப் பேரரசர் | |||||
ஆட்சிக்காலம் | 17 நவம்பர் 1796 – 23 மார்ச் 1801 | ||||
முடிசூடல் | 5 ஏப்ரல் 1797 | ||||
முன்னையவர் | இரண்டாம் கேத்தரின் | ||||
பின்னையவர் | முதலாம் அலெக்சாந்தர் | ||||
பிறப்பு | 1 அக்டோபர் [யூ.நா. 20 செப்டம்பர்] 1754 சென் பீட்டர்ஸ்பேர்க், உருசியப் பேரரசு | ||||
இறப்பு | 23 மார்ச்சு 1801(1801-03-23) (அகவை 46) புனித மைக்கேல் அரண்மனை, சென் பீட்டர்ஸ்பேர்க் | ||||
புதைத்த இடம் | பீட்டர், பவுல் பேராலயம் | ||||
துணைவர் |
| ||||
குழந்தைகளின் #வாரிசுள் |
| ||||
| |||||
தந்தை | உருசியாவின் மூன்றாம் பீட்டர் | ||||
தாய் | உருசியாவின் இரண்டாம் கத்தரீன் | ||||
கையொப்பம் |
பவுல் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை தனது தாய் கேத்தரீனால் வெளியுலகிலிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்தார். பவுலின் ஆட்சி நான்கு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. அவரது சதிகாரர்களால் அவர் படுகொலை செய்யப்பட்டார். இவர் உருசியப் பேரரசின் சிம்மாசனத்திற்கு அடுத்தடுத்த வாரிசுகளை ஏற்றுக் கொள்ளுவதற்கான சட்டங்களை அறிமுகப்படுத்தினார். இச்சட்டம் உருசியப் பேரரசின் முடிவு வரை (ரொமானொவ் வம்சம்) அமுலில் இருந்தது. இவர் பிரெஞ்சுப் புரட்சிப் போர்களிலும் தலையிட்டார். இவரது ஆட்சியின் முடிவில், கிழக்கு சியார்சியாவின் உள்ள கார்ட்லி-கக்கேதி இராச்சியங்களை உருசியப் பேரரசுடன் இணைத்தார். இது அவரது மகனும் வாரிசுமான முதலாம் அலெக்சாந்தரால் உறுதிப்படுத்தப்பட்டது.